Monday, October 10, 2016

•தன்னை இந்தியனாக நினைக்கும் தமிழர் யாராவது இதற்கு பதில் தருவார்களா?

•தன்னை இந்தியனாக நினைக்கும் தமிழர் யாராவது இதற்கு பதில் தருவார்களா?
பாகிஸ்தான் சுட்டு இறந்த 18 பேரும் “இந்தியர்கள்” என்கிறார்கள். ஆனால் இலங்கை சுட்டு இறந்த 600 பேரையும் தமிழக மீனவர் என்று கூறுகிறார்களே. அது ஏன்?
18 பேர் இறந்தமைக்காக உடனடியாக எல்லைதாண்டி பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் 600 மீனவர் கொல்லப்ட்டமைக்காக ஒரு முறைகூட இலங்கை ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லையே. அது ஏன்?
பதில் தாக்குதல் நடத்தாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் தமிழக மீனவர்களை சுட்ட இலங்கை ராணுவத்திற்கு பயிற்சியும் ஆயுதமும் இந்திய அரசால் வழங்கப்படுகிறதே. இது என்ன நியாயம்?
அப்படியென்றால் தமிழர்கள் “இந்தியர்கள்” இல்லையா?
தமிழருக்கு ஒரு நியாயம்
மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்திய நியாயமா?

No comments:

Post a Comment