Monday, October 10, 2016

இந்தியாவில் காவிரியை விட காஸ்மீரைவிட கஜோல் நடிகை ரொம்ப முக்கியம்!

•இந்தியாவில்
காவிரியை விட
காஸ்மீரைவிட
கஜோல் நடிகை ரொம்ப முக்கியம்!
காவிரி பிரச்சனைக்காக 39 அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்திக்க சென்றார்கள். ஆனால் நேரம் இல்லை என பிரதமர் மோடி சந்திக்க மறுத்துவிட்டார்.
நடிகை கஜோலை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். நடிகை கஜோலுக்கு நேரம் ஒதுக்கிய மோடியினால் 39 பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லை.
ஏனெனில் காவிரிப் பிரச்சனையைவிட நடிகை கஜோல் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானவராக மோடி கருதுகிறார்.
காஸ்மீரில் பில்லட் குண்டு தாக்கி 12 வயது சிறுவன் நேற்றைய தினம் இறந்துள்ளான். இதுவரை 84 பேர் தடைசெய்யப்பட்ட பில்லட் குண்டுகளால் இந்திய ராணுவம் கொன்றுள்ளது.
கடந்த 91 நாட்;களாக காஸ்மீரில் பதட்ட நிலை காணப்படுகிறது. பல பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படுகிறது. ஆனால் இவை குறித்து கவனிப்பதற்கு பிரதமர் மோடிக்கு நேரமில்லை.
ஏனெனில் அவருக்கு காஸ்மீரில் சிறுவர் கொல்லப்படுவதை கவனிப்பதைவிட விட நடிகை கஜோலுடன் உரையாடுவது ரொம்ப முக்கியம்.
இந்திய ராணுவம் இதுவரை சுட்டுக்கொன்ற எதிரி நாட்டு வீரர்களின் எண்ணிக்கையைவிட சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மக்களின் எண்ணிக்கை அதிகம். தனது மக்களை சுட்டுக் கொல்லவா இந்திய ராணுவம் இருக்கிறது?
இது குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லையா? அவருக்கு காவிரியைவிட காஸ்மீரைவிட, நடிகை கஜோல் முக்கியமாக தெரிகிறதே.
என்ன செய்வது? பாவம் இந்திய மக்கள்!

No comments:

Post a Comment