Monday, October 10, 2016

•பலிபீடங்களில் எப்போதும் வெட்டப்படுவது ஆடுகளையே யொழிய சிங்கங்களை அல்ல.

•பலிபீடங்களில் எப்போதும் வெட்டப்படுவது ஆடுகளையே யொழிய சிங்கங்களை அல்ல.
எங்கு கலவரம் நடந்தாலும் அங்கு பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை மக்களே யொழிய பணக்காரர்கள் அல்ல.
கர்நாடகாவில் பஸ்கள் எரிக்கப்படுவது உண்மைதான். ஆனால் அவ் பஸ் முதலாளிகள் இன்சூரன்ஸ் மூலம் தமது நட்டத்தை சமாளித்துவிடுவார்கள்.
ஆனால் அந்த பஸ்களில் பணி புரிந்த, பயணித்த , ஏழைகளின் பாதிப்பிற்கு யாரும் நட்ட ஈடு கொடுக்கப் போவதில்லை.
தமிழ் லாரி டிறைவர் ஒருவரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர் கன்ட வெறியர்கள். அவருக்கு யார் என்ன நட்டஈடு கொடுக்கப் போகின்றார்கள்?
யுத்தத்தில் எதிரி ராணுவ வீரனை கைது செய்யதாலும் மரியாதையாக நடத்த வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. ஆனால் தமிழ் டிறைவரை இப்படி பொது வெளியில் நிர்வாணமாக்கி அசிங்கப்டுத்துகிறார்களே.
சந்தோஸ் என்ற தமிழ் இளைஞன் பல வெறியர்களால் தாக்கப்பட்டார். அது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அது தவறு என்று கூட கர்நாடக அரசு கூற முன்வரவில்லை.
இன்னொரு தமிழ் முதியவரை கன்னடம் பேசுமாறு கூறி கன்னட வெறியர்கள் தாக்கிறார்கள். அவர்கள் ஏழை முதியவரிடமே இவ்வாறு நடந்து கொள்கிறார்களே யொழிய கர்நாடகாவில் இருக்கும் கலைஞர் மகள் செல்வியிடம் இப்படி கேட்பதில்லை.
கர்நாடகாவில் பல அப்பாவி ஏழை தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். ஆனால் அதேவேளை கலைஞர் கருணாநிதி மகள் செல்வி குடும்பத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
பஸ்கள் கொளுத்தப்படுகின்றன. கடைகள் எரிக்கப்படுகின்றன. ஆனால் மாறன் குடும்;பத்து உதயா டிவி சொத்துகள் கர்நாடக பொலிசாரால் பாதுகாக்கப்படுகின்றன.
இங்கு எனது கேள்வி என்னவெனில் செல்வியையும் மாறன் குடும்பத்து சொத்துகளையும் அக்கறையாக பாதுகாக்கும் கர்நாடக அரசு அங்கு வாழும் ஏழைத் தமிழர்களை ஏன் பாதுகாக்கவில்லை?
தமிழ்நாட்டில்கூட ராமேஸ்வரம் வந்த கன்னட பக்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் கன்னட முதலாளிகள், நடிகர்கள், சாமியார்கள் எல்லோரும் பாதுகாப்பாகவே இருக்கின்றனர்.
பலிபீடங்களில் எப்போதும் ஆடுகளே வெட்டப்படுகின்றன. சிங்கங்களை அல்ல என்ற டாக்டர் அம்பேத்காரின் வரிகள் இப்போதும் உண்மையாகவே இருக்கின்றது.

No comments:

Post a Comment