Monday, October 10, 2016

சீ… வெட்கம்! மீண்டும் ஒருமுறை தமிழன் தலை குனிகிறான்.

சீ… வெட்கம்!
மீண்டும் ஒருமுறை தமிழன் தலை குனிகிறான்.
இதோ, இந்த தமிழன் தன் குழந்தைகளை காப்பாற்ற ஓடுவது
சிங்கள இராணுவத்திடமிருந்து அல்ல
கன்னட வெறியர்களிடமிருந்து அல்ல
மாறாக
இந்து முன்னனி என்னும் சக தமிழனிடமிருந்தே
இத்தனை நாளும் மாமன் மச்சான் உறவு சொல்லி திரிந்தவர்கள்
இன்று திடீரென ஒருவரை ஒருவர் கொல்ல துடிப்பது ஏன்?
40 ஆயிரம் தமிழர்களை சிங்கள ராணுவம் கொல்லும்போது காட்டாத வீரத்தை
900 தமிழக மினவர்களை இலங்கை ராணவம் கொன்ற போது காட்டாத வீரத்தை
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது காட்டாத வீரத்தை
கோவையிலும் திருப்பூரிலும் சக தமிழன் மீது காட்டுவது என்ன நியாயம்?
கொல்லப்பட்ட சசிகுமார் மட்டுமா இந்து?
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 40 ஆயிரம் தமிழர்களில் இந்து இல்லையா?
கொல்லப்பட்ட 900 தமிழக மீனவர்களில் இந்து இல்லையா?
கர்நாடாகாவில் அடிவாங்கிய தமிழன் இந்து இல்லையா?
அப்போதெல்லாம் ஏன் இந்த இந்து மன்னனிக்கு வீரம் கொப்பளிக்கவில்லை?
இந்து முன்னனி என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் பாய் கடையில் பிரியாணி திருடுகிறது.
இன்னொரு கூட்டம் ரெலிபோன் கடையில் திருடுகிறது.
இது இந்து முனன்னியா அல்லது திருட்டு முன்னனியா?
இத்தனையையும் தமிழக பொலிஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறது!
வுரலாற்றில் இப்போதுதான் உலக தமிழினம் தமக்குள் ஒன்றபட்டு போராட ஆரம்பித்துள்ளது.
ஆதனை தடுத்து குழப்புவதற்காகவே இப்படி இந்து முன்னனிகள் தமிழகத்தில் உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது.
எனவே தமிழ் மக்கள் நலன் கருதி இந்த திருட்டு முன்னனிகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

No comments:

Post a Comment