Monday, October 10, 2016

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு”- பாரதிதாசன்

•“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு”- பாரதிதாசன்
தாயகத்தில் இனி தமிழர் போராடமாட்டார்கள் என்றனர்
புலத்தில் சிலர் மட்டுமே போராடுவதாக கூறினர்.
தமிழகத்தில் சிலர் புலிப் பணத்திற்காக பேசுவதாக கூறினர்.
ஆனால் இவர்களின் இந்த கூற்றுகளை எல்லாம் பொடி பொடியாக்கும் வண்ணம் தமிழர் ஒன்று திரண்டு பேரணி நடத்தியுள்ளனர்.
காவிரி பிரச்சனைக்காக முதன் முதலாக யாழ்நகரில் அதுவும் இந்திய தூதரகத்திற்க முன்னால் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
காவிரி பிரச்சனைக்காக முதன் முதலாக லண்டன் மற்றும் கனடாவில் தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மகிந்த ராஸபக்ச மலேசியா சென்றபோது மலேசிய தமிழர் ஒன்று திரண்டு போராடினார்கள்.
வரலாற்றில் முதன் முதலாக உலக தமிழினம் ஒன்றுபட்டு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக போராட அரம்பித்துள்ளனர்.
அண்மையில் இலங்கை மற்றும் இந்திய அரசுக்கு எதிராக சம்பூர் மக்கள் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
தமிழர்களின் தலைமை என்று சொல்பவர்கள் கைவிட்டாலும் மக்கள் தாமாகவே போராடி உரிமைகளைப் பெறுவார்கள்.
தமக்கு துரோகம் செய்யும் தலைமையை தூக்கியெறிந்துவிட்டு தமக்கான தலைமையை உருவாக்குவார்கள்.
ஏனெனில் தலைமை தானாக உருவாவதில்லை. மக்களே தமக்கான தலைமையை உருவாக்கிறார்கள்.

No comments:

Post a Comment