Thursday, October 20, 2016

இந்த ஆள் உண்மையில் லூசா? அல்லது லூசு மாதிரி நடித்து மக்களை ஏமாற்றுகிறாரா?

இந்த ஆள் உண்மையில் லூசா? அல்லது
லூசு மாதிரி நடித்து மக்களை ஏமாற்றுகிறாரா?
தமிழர்களின் அடையாளங்களையும் உரிமையையும் பாதுகாக்கவே சிவசேனை என்று கூறுகிறார்.
அப்படியென்றால் இவர் அங்கம் வகிக்கும் தமிழ்தேசகூட்டமைப்பு தமிழர்கiளின் அடையாளங்களையும் உரிமையையும் பாதுகாக்க தவறிவிட்டது என்கிறாரா?
அவ்வாறு அவர் கருதியிருந்தால், தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகியிருக்க வேண்டும்?
தமிழ்தேசிய கூட்டமைப்பின் மூலம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருக்க வேண்டும்?
இதை எதையும் செய்யாமல் தொடர்ந்தும் தமிழ்தேசிய கூட்டமைபில் இருந்துகொண்டு இவ்வாறு சிவசேனை ஆரம்பித்தமைக்கு இவர் மீது தமிழ்தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு இவர் மீது நடவடிக்கை எடுக்காது. இவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தோ அல்லது அதன் மூலம் பெற்ற பாராளுமன்ற பதவியையோ துறக்கப் போவதில்லை.
இவர்கள் தமது சொந்த நலன்களை பேணுவதற்கும் பதவியை தக்கவைத்தக்கொள்வதற்கும் எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை போவதற்குமே இப்படி சிவசேனை வேடம் போடுகிறார்கள்.

No comments:

Post a Comment