Monday, October 10, 2016

ஏதிரி உன்னை பாராட்டுகிறான் என்றால் நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம்!

•ஏதிரி உன்னை பாராட்டுகிறான் என்றால்
நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது பிரதமர் ரணில் வழங்கியுள்ளார் எனில் அவர் அரசுக்கு சோரம் போய்விட்டார் என்று அர்த்தமா?
முன்னர் சப்றா பைனாஸ் கம்பனி வைத்து தமிழ் மக்களை ஏமாற்றியவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர் இந்த சரவணபவன்.
பின்னர் எட்டு கோடி ரூபாவிற்கு சொகுசு வாகனம் இறக்கி அரசிற்கு வரி ஏய்ப்பு செய்தார் என குற்றம் சாட்டப்பட்டவர்.
தமிழ் மக்களின் எழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு தனது உதயன் பத்திரிகையை பயன்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டவர்.
இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அரசு இவருக்கு விருது வழங்கிறது எனில் இவர் அரசுக்கு சோரம் போய்விட்டார் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்?

No comments:

Post a Comment