Monday, October 31, 2016

கலகம் செய்ய நிமிர்ந்துவிட்டவனுக்கு உதவி செய்வதே இலக்கியத்தின் பணி – மாக்சிம் கார்க்கி

•கலகம் செய்ய நிமிர்ந்துவிட்டவனுக்கு உதவி செய்வதே இலக்கியத்தின் பணி – மாக்சிம் கார்க்கி
மாபெரும் ஆசான் எங்கெல்ஸ் கூற்றுப்படி “ அறிவியலின் மேடையில் உரசிப் பார்க்கப்படாத எதுவும் இற்று வீழ்ந்துவிடும்”.
எந்த ஒன்றை ஆராய்வதாக இருந்தாலும் அதற்கு இருக்கும் கருவிகள் அறிவியல் முறையில் உரசிப் பார்ப்பதும் வரலாற்று அறிவும்தான்.
பிரான்சில் 30.10.2016 யன்று நடைபெறவுள்ள 23வது வாசிப்பு மனநிலை விவாதத்தில் நான் எழுதிய “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தோழர் ரயாகரன் கருத்துரை வழங்க இருக்கிறார்.
நூறு மலர்கள் மலரட்டும். ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும் என்ற மாவோவின் கருத்து இணங்க இலக்கிய ஆர்வலர்கள் பங்கு பற்றி தங்கள் கருத்துகளை பகிரட்டும்.
ஆம். கலகம் செய்ய துணிந்துவிட்ட தமிழ் மக்களுக்கு இலக்கியம் தன் பங்கை வழங்கட்டும்.

No comments:

Post a Comment