Monday, January 20, 2014

கடவுள்!

கடவுள்!

• ஒருவன் உயர்ந்த சாதி என்றும் இன்னொருவன் தாழ்ந்த சாதி என்றும் மனிதனைப் படைப்பது கடவுள் என்றால் அந்த கடவுள் எமக்கு தேவையில்லை.

• ஒருவன் பணக்காரன் என்றும் இன்னொருவன் ஏழை என்றும் இருப்பது கடவுள் விதி என்றால் அந்த கடவுள் எமக்கு தேவையில்லை.

• சுரண்டுபவனும் சுரண்டப்படுபவனும் கடவுள் படைப்பு என்றால் அந்த கடவுள் எமக்கு தேவையில்லை.

• வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் என்றும் கறுப்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதும் கடவுள் நியதி என்றால் அந்த கடவுள் எமக்கு தேவையில்லை.

• உலகில் உள்ள சாதி, மத, இன அழிவுகள் அனைத்திற்கும் காரணம் கடவுள் என்றால் அந்த கடவுள் எமக்கு தேவையில்லை.

சில நாட்களுக்கு முன்னர் வட இந்தியாவில் ஒரு நிர்வாண சாமியாரின் ஆண் உறுப்பை தொட்டு வணங்கும் ஒரு பக்தனின் படத்தை பிரசுரித்து இது பகுத்தறிவுக்கு உகந்த செயலா? என கேட்டிருந்தேன். அது பக்தர்களின் மனதை புண்படுத்தும் பதிவு என்று காரணம் கூறி பேஸ்புக் நிர்வாகம் எனது பதிவை நீக்கியுள்ளது. ஒரு நாள் தடையும் விதித்தது.

உலகம் உருண்டை என்று முதன் முதலில் கூறியவரை சமூகத்திற்கு எதிரான கருத்தை கூறியதாக அன்றைய போப்பாண்டவர் மரண தண்டனை விதித்தார். இன்றும் மத நிறுவனங்கள் பகுத்தறிவுக்கு விரோதமான கருத்துகளை ஆதரித்து வருகின்றன.

முதலாளித்துவமும் தனது பாதுகாப்பிற்காக மதங்களை ஆதரித்து வளர்க்கின்றது. அதன் ஒரு அம்சமாகவே பேஸ்புக் நிர்வாகமும் மத மூட நம்பிக்கைகளுக்கு ஆதரவாக எனது பதிவை நீக்கியுள்ளது.

ஒரு நாள் அல்ல ஒரேயடியாக என்னை பேஸபுக்கில் இருந்து தடை செய்தாலும் அந்த தடை செய்யும் கணம் வரை எனது எழுத்துக்கள் மூட நம்பிக்கைக்கு எதிராக பகுத்தறிவை வளர்ப்பதற்கே பயன்படும் என உறுதி கூறுகிறேன்.

No comments:

Post a Comment