Wednesday, January 29, 2014

• இந்து மதத்தை இழிவு படுத்திப் பேசியமைக்காக சீமான் மீது வழக்கு பதிவு

• இந்து மதத்தை இழிவு படுத்திப் பேசியமைக்காக சீமான் மீது வழக்கு பதிவு

• பகுத்தறவு வாதிகள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

இந்து மதத்தை இழிவு படுத்திப் பேசியமைக்காக நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில், பெரியாரின் வழி வந்த கட்சி தலைவி ஆட்சி செய்கிற தமிழ்நாட்டில, பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்தமைக்கு வழக்கு என்றால் அதன் அர்த்தம் என்ன?

இந்து மதத்தை இழிவு படுத்திப் பேசியிருந்தால் அதற்கு இந்து மதக் கடவுள்தானே நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு பொலிஸ் ஏன் நடவடிக்கை எடுக்கிறது?

தமிழ்நாடு பொலிஸ் எப்போதிலிருந்து இந்து மதக்கடவுளின் வேலையை செய்ய தொடங்கியுள்ளது?

சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் சக்தி இந்து மதக்கடவுள்களுக்கு இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறதா?

இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு அனைவருக்கும் சுதந்திரம் உண்டு என்கிறார்கள். கடவுள் இருக்கு என்று கூற ஒரு கூட்டத்திற்கு சுதந்திரம் உண்டு என்றால் கடவுள் இல்லை என்று கூற இன்னொரு கூட்டத்திற்கு ஏன் சுதந்திரம் இல்லை?

கடவுள் பெயரால, மதத்தின் பெயரால், மூட நம்பிக்கைகளையும், கலவரங்களையும் ஒரு கூட்டம் விதைக்க முடியும் என்றால் அதை எதிர்த்து பகுத்தறிவை வளர்ப்பது எப்படி தவறாகும்? அவ்வாறு பகுத்தறிவை வளர்ப்பவர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்?

மதத்தின் பெயரால் பல்லாயிரம் மக்களை கொன்றவன் தலைவன் மட்டுமல்ல ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஆகவும் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு இல்லை. ஆனால் பகுத்தறிவை பிரச்சாரம் செய்பவன் மீது வழக்கு. இதன் அர்த்தம் என்ன?

• சீமான் என்ன பேசினாரோ அதைவிட அதிகமாக நாம் எல்லோரும் பேசுவோம்!

• சீமான் மீதான் வழக்கை நாம் அனைவரும ஒன்றாக கண்டிப்போம்!

• சீமானுக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்!

அன்று பெரியார் கையில் செருப்பு இருந்தது
அடங்கி இருந்தார்கள் மதவாதிகள்.
இன்று எம் கையில் எதுவும் இல்லை.
அதனால்தான் வழக்கு என்று மிரட்டுகிறார்கள்.
இதுவே தொடருமானால்
நாளை எம் கையில் இருப்பது
செருப்பு அல்ல துப்பாக்கியே!

No comments:

Post a Comment