Monday, January 20, 2014

• நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் பதில் தருவாரா?

• நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் பதில் தருவாரா?

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பு பல மில்லியன் செலவு செய்து உலகம் பூராவும் தேர்தல் நடத்தி நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக தன்னைத்தானே நியமனம் செய்த உருத்தி குமாரன் முகத்தில் அமெரிக்கா கரியைப் பூசியுள்ளது. இது குறித்து உருத்திரகுமாரன் என்ன பதில் தரப் போகிறார்?

அமெரரிக்கா வரும்.
அமெரிக்கா உதவி செய்யும்.
அமெரிக்கா காப்பாற்றும்
அமெரிக்கா ஈழம் பெற்று தரும்.
அமெரிக்கா மகிந்தவை தண்டிக்கும் என்றெல்லாம் அமெரிக்க புராணம் பாடி வந்த உருத்திர குமாரனையே அமெரிக்கா காப்பாற்றவில்லை. உதவி செய்ய வில்லை. மாறாக நீதிமன்றம் மூலம் அவர் முகத்தில் கரியைப் பூசியுள்ளது. இனி அவர் என்ன கூறுவார்?

வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கவில்லை. அவர்களுக்கு தோல்வியை கொடுத்துள்ளார். சட்ட நிறுவன நிர்வாகம் தெரியவில்லை. அது குறித்து படிக்க வேண்டும் என்றெல்லாம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்ல தீர்ப்பை இரகசியமாக வைத்திருக்கும்படி உருத்திரகுமாரன் கேட்ட கோரிக்கையையும் மறுத்து பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

அதாவது தமிழீழ பிரதமர் ஒரு மோசடியானவர். அறிவற்றவர் என்றெல்லாம் அமெரிக்க நீதிமன்றம் அசிங்கப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் யுத்தத்திற்கு எப்படி உதவியது என்பதை ஜனாதிபதி மகிந்தவே பல தடவை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்படியிருக்க இந்த உருத்திரகுமாரன் கும்பல்கள் அமெரிக்கா தமிழீழம் பெற்று தரும் என்று தமிழ் மக்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தனர்.

இனியாவது இந்த ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபடாமல் மக்கள் சார்ந்து போராட்டங்களை முன்னெடுக்க முன்வர வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒருபோதும் தமிழ் மக்களின் நண்பன் அல்ல. மாறாக மாபெரும் அழிவுக்கு துணை நின்ற ஏகாதிபத்தியம். அது எப்போதும் எமது எதிரி என்பதை நினைவில் கொள்வோம்.

No comments:

Post a Comment