Wednesday, January 29, 2014

• ஜக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை தமிழர் தூக்கில் இடப்பட்டார்!

• ஜக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை தமிழர் தூக்கில் இடப்பட்டார்!

• முறையான விசாரணை நடைபெற வில்லை என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிப்பு!

விபத்திற்கு மரண தண்டனையா?
என்ன காட்டுமிராண்டித்தனம்?
இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?

• தூக்கில் இடப்பட்டவர் தமிழர் என்பதால் இலங்கை அரசு அக்கறை கொள்ளவில்லை.

• தூக்கில் இடப்பட்டவர் கிழக்கு மாகாண தமிழர் என்பதால் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை.

• தூக்கில் இடப்பட்டவர் ஏழை என்பதால் நீதி நியாயம் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்தியாவில் சிலருக்கு மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்வான செய்தி வந்த அதே நேரத்தில் ஜக்கிய அரபு இராச்சியத்தில் ஒரு இலங்கை தமிழர் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்ற துயர செய்தி வந்துள்ளது.

தூக்கில் இடப்பட்டவர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் . அவர் இலங்கையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இவர் தமிழர் என்பதால் இலங்கை அரசு அக்கறை கொள்ளவில்லை. இவரை காப்பாற்ற குரல் கொடுக்காதது மட்டுமல்ல இவருடைய உடலைக்கூட பெற்றுக் கொடுக்க இலங்கை அரசு முன்வரவில்லை.

இவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர் என்பதால் எமது ஊடகங்களும் வழக்கம்போல் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனும் கூட இதற்கு குரல் கொடுக்காதது வேதனையாக இருக்கிறது.

இவர் ஒரு ஏழை. இவருக்காக உதவி செய்யவோ குரல் கொடுக்கவோ யாரும் இல்லை. இவருக்கு முறையான விசாரணை நடைபெறவில்லை என சர்வதேச மன்னிப்பு சபையே குறை கூறியுள்ளது.

ஜக்கிய அரபு இராச்சியத்தின் காட்டு மிராண்டித்தனத்தை கண்டிப்போம்!

உலகம் முழுவதும் மரண தண்டனை ஒழிக்க குரல் கொடுப்போம்!

No comments:

Post a Comment