Friday, July 31, 2020

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! ஈழத்திலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி இன்று ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை “ஒற்றுமை” என்பதே. ஆனால் “ஒற்றுமை” அவசியம் என்பதை உணரப்பட்ட அளவிற்கு அந்த ஒற்றுமையை ஏற்படுத்த ஒரு “அமைப்பு” அவசியம் என்பது உணரப்படவில்லை. ஆம். ஒற்றுமை என்பது ஒரு இரவில் தானாக ஏற்பட்டுவிடக்கூடிய அதிசயம் இல்லை. அது ஒரு ஒன்றுபட்ட அமைப்பால் உருவாக்கப்பட வேண்டியது. தமிழ் மக்கள் ஒன்றுபடாவிட்டால் அவர்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவது இல்லை. ஒன்றுபட்டால் அவர்களால் பெற முடியாதது எதுவுமே இருக்கப்போவதுமில்லை. இந்த உண்மை தமிழ் இனத்திற்கு உணர வைக்க வேண்டும். உலக அளவில் தமிழ் இனம் உணர்ந்து ஒன்றுபடுமாயின் அது சிங்கள இனத்தைவிட நாலு மடங்கு பலமுள்ளதாக இருக்கும். அப்புறம் , தீர்வு கேட்டால் ரத்த ஆறு ஓடும் என்று தமிழனைப் பார்த்து மிரட்ட சிங்கள இனவெறியர்கள் யாருக்காவது தைரியம் வருமா? கிழக்காசியாவின் தூங்கும் அரக்கனா எம் தமிழ் இனம்? Image may contain: 1 person

No comments:

Post a Comment