Friday, July 31, 2020

சுமந்திரன் என்னும் மானஸ்தர்!

சுமந்திரன் என்னும் மானஸ்தர்! இம்முறை தேர்தலில் தோல்வியுற்றால் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி யாக மாட்டேன் என்று சுமந்திரன் கூறியுள்ளார். சுமந்திரன் மானஸ்தர் என்றும், சொன்னால் அதை நிச்சயம் காப்பாற்றுவார் என்றும், அவரது விசுவாசிகள் கூறுகின்றனர். ஆனால் இதே மானஸ்தர்தான் கடந்த நல்லாட்சியில் தீர்வு பெறவில்லை என்றால் ராஜினாமா செய்வேன் என்று கூறினார். அதுமட்டுமல்ல தன் சட்டைப் பாக்கட்டைக்காட்டி “அந்த ராஜினாமா கடிதம் ரெடியாக இருக்கிறது” என்றார். தீர்வும் வரவில்லை. மானஸ்தர் சுமந்திரன் சொன்னபடி ராஜினாமாவும் செய்யவில்லை. ஆனால் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி மீண்டும் பதவி தரும்படி இப்பொது வந்து கேட்கிறார். எனவே தேர்தலில் தோற்றாலும் சுமந்திரன் கூறியபடி ஒருபோதும் அரசியலில் இருந்து ஒதுங்க மாட்டார். மாறாக எப்படியாவது பதவி பெறவே முயல்வார். ஏனெனில் அவராலும் சம்பந்தர் ஐயாவாலும் பதவி இன்றி இருக்க முடியாது. பதவி இல்லை என்றால் சொகுசு பங்களாவில் இருக்க முடியாது என்பது சம்பந்தர் ஐயாவுக்கு நன்கு தெரியும். அதேபோன்று, பதவி இல்லை என்றால் சிங்கள அதிரடிப் பொலிஸ் பாதுகாப்பு இல்லாமற் போய்விடும் என்பது சுமந்திரனுக்கும் நன்கு தெரியும். எனவே இருவுரும் இறக்கும்வரை பதவியை விட்டுவிட மாட்டார்கள். Image may contain: 1 person

No comments:

Post a Comment