Friday, July 31, 2020

இந்தியா யாருக்கு பின்னால் நிற்கிறது?

இந்தியா யாருக்கு பின்னால் நிற்கிறது? இந்தியா தனக்கு பின்னால் நிற்பதாக சம்பந்தர் ஐயா கூறுகிறார். ஆனால் சிலர், இந்தியா விக்கினேஸ்வரன் பின்னால் நிற்பதாக கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால் இவர்கள் யார் பின்னாலும் இந்தியா இல்லை. இவர்கள்தான் எல்லோரும் இந்தியா பின்னால் நிற்கிறார்கள். இந்தியா இதுவரை இவர்களை திரும்பிப் பார்க்கவில்லை. இனியும் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ஆனாலும் இந்தியாவை நம்புமாறு கோருவதை இவர்கள் நிறுத்தப் போவதுமில்லை. இந்த நிலையில் விக்னேஸ்வரனை ஈழத்து தாய்லாமா என்றும் அவரை வைத்து இந்திய ஆதரவை பெறலாம் எனவும் சிலர் கூறுகின்றனர். 1983ல் இலுப்பப்பழம் பழுத்தால் வெளவால் வரும் என்றார்கள். வந்தது வெளவால் அல்ல நரி என்பதை அனுபவத்தில் கண்டோம். இப்போது மீண்டும் விக்னேஸ்வரன் வந்தால் இந்தியா உதவும் என்கிறார்கள். ஒறிஜினல் தாய்லாமாவுக்கே இந்தியா உதவவில்லை. அப்படியிருக்க ஈழத்து தாய்லாமாவுக்கு இந்தியா உதவும் என எப்படி இவர்கள் நம்புகின்றனர்? கேட்டால் உலகமயமாக்கல், பூகோளமயமாக்கல் கதைகள் பல சொல்கின்றனர். தமக்கு கிடைக்கும் இறைச்சித் துண்டிற்காக இந்திய எஜமானுக்கு நன்றியுடன் வாலாட்டும் நாய்க்குட்டிகள் இவர்கள். Image may contain: Nalli Thaya, sitting and beard

No comments:

Post a Comment