Friday, July 31, 2020

உன் கோவணம் உரியப்பட்டதா?

உன் கோவணம் உரியப்பட்டதா? உரிந்தவன் கைகளை வெட்டு. ஆனால் ஒருபோதும் கெஞ்சிக் கோவணம் கட்டாதே. அதைவிட அம்மணமாகவே போராடு 1983ல் இனக் கலவரம் என்னும் பெயரில் பல தமிழர்களை கொன்றார்கள். உயிரோடு எரித்தார்கள். சிறைச்சாலையில் அதிக பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களைக்கூட கொன்றார்கள். இது இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை. இதுவரை இதற்குரிய நீதி தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இன்றும்கூட இரத்த ஆறு ஒடும் என்று பகிரங்கமாக தமிழ் மக்களை மிரட்டுகிறார்கள். தமிழ் பகுதியில் ரத்த அறு ஓடினால் மீண்டும் கட்டுநாயக்கா விமான நிலையம் மட்டுமல்ல முழு இலங்கையுமே அதிரும் என்று கூற எம்மிடையே ஒரு தமிழ் தலைவர் இல்லையே. அதுமட்டுமல்ல தமிழ் மக்களின் சுதந்திரம் மறுக்கப்படுமானால் சிங்கள மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துக்கூறக்கூட ஒரு முற்போக்கான சிங்கள தலைவரும் இலங்கையில் இல்லையே. குறிப்பு - 1983 யூலை படுகொலைகளே பல்லாயிரம் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது. மீண்டும் ரத்த ஆறு ஒடும் என்றால் மீண்டும் ஆயுதம் ஏந்த தமிழ் இளைஞர்கள் தயங்க மாட்டார்கள். Image may contain: one or more people and outdoor Image may contain: 1 person, standing and outdoor Image may contain: one or more people Image may contain: one or more people

No comments:

Post a Comment