Friday, July 31, 2020

கழுதை! முன்னால் போனால் முட்டும் பின்னால் போனால் உதைக்கும்!

•கழுதை! முன்னால் போனால் முட்டும் பின்னால் போனால் உதைக்கும்! 20 கோடி ரூபா எங்கே என்று கணக்கு கேட்ட பெண்ணை மகிந்தவின் ஊடுருவல் என்றார் சுமந்திரன் அடுத்து ஜபிசி ஊடகத்தை மகிந்தவின் ஆட்கள் என்று கூறினார் சுமந்திரன். “ரணில் உங்களை நல்லாய் ஏமாற்றிவிட்டார்”என்று சுமந்திரனிடம் அவரது மனைவி கூறியுள்ளார். இப்போது எமது அச்சம் என்னவெனில் பழக்கதோஷத்தில் தன்னுடைய மனைவியையும் மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் சொல்லித் தொலைத்துவிடுவாரோ என்பதே. தனது சிங்களப்பேட்டி சம்பந்தர் ஐயாவுக்கு விளங்கவில்லை என்றார். தனது சிங்களப் பேட்டி விளங்காமல் அறிக்கைவிட்ட மாவை சேனாதிராசா மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார். இப்போது என்னடாவென்றால், தனது பேச்சு, தன் பேட்டிகள் உதயன் பத்திரிகை திரித்து எழுதுகிறது என்கிறார். கனடா ஊடகவியலாளர்கள் தனது பேட்டிக்கு வேண்டுமென்றே பொய் தலைப்பு இடுவதாக கூறுகிறார். கூட்டங்களில் கேள்வி கேட்பவர்களுக்கு தான் அளிக்கும் பதில்கள்கூட யாருக்கும் புரியுதில்லை என்று சுமந்திரன் புலம்புகிறார். ஒருவருக்கு புரியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அந்த ஒருவரின் குறைபாடு என கருதலாம். ஆனால் எவருக்கும் புரியவில்லை என்றால் அது கூறுபவரின் குறைபாடு என்பதை சுமந்திரன் புரிந்து கொள்ள வேண்டும். சுமந்திரன் அவர்களே! தேர்தல் தோல்வி பயத்தில் உளற ஆரம்பித்து விட்டீர்கள். அதனால் எல்லோர் மீதும் பழி போடுகிறீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருந்து சிந்தியுங்கள். தவறு உங்கள் மீதே உள்ளது என்பதை கண்டறிவீர்கள். குறிப்பு - சுமந்திரன் தம்பிகளுக்கு! சுமந்திரன் மனைவி கூறியதற்கு என்ன ஆதாரம் என்று என்னிடம் கேட்காதீர்கள். இதை சுமந்திரனே கூறியுள்ளார். Image may contain: Anthonippillai Reginoldraj

No comments:

Post a Comment