Friday, July 31, 2020

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.

செய்தி - தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. மறுத்தால் விளைவு பாரதூரமாகலாம் என கோத்தாவுக்கு சம்பந்தர் எச்சரிக்கை. அடி ஆத்தீ. போராட்டம் வெடிக்கும் என்று கோத்தாவையே மிரட்டுகிறாரே இந்த சம்பந்தர் தாத்தா அப்ப இனி வெளியில போய் விளையாட முடியாதா தாத்தா? மீண்டும் எமக்கு பங்கர் வாழ்க்கைதானா தாத்தா? இந்த லூசு தாத்தா தண்ணியைப் போட்டிட்டு உளறுதா ?அல்லது உண்மையில் குண்டைக் கட்டிக்கொண்டுபோய் வெடிக்கப் போகுதோ தெரியவில்லையே. சொர்க்கத்தில் 72 மனைவி கிடைக்கும் என்று சொல்லி சஹ்ரானை யாரோ ஏமாற்றியது போல எங்கட தாத்தாட்டையும் யாரோ 72 பங்களா கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறாங்கள் போல அதுதான் மனுசன் இப்படி வெறி பிடிச்சு நிக்குது. ஐயோ பயமாய் இருக்குதே! குறிப்பு- இந்த சம்பந்தர் ஐயாவின் அறிக்கையில் இருந்து தெரிந்துகொள்ளக்கூடியது என்னவெனில் (1) ஐயா நீண்ட உறக்கத்தில் இருந்து எழும்பிவிட்டார். (2) ஐயா உயிரோடு இருக்கிறார். கொரோனோவில் சாகவில்லை. (3) முக்கியமாக வடக்கு கிழக்கில் தேர்தல் வந்துவிட்டது Image may contain: 1 person, standing Image may contain: 1 person, sitting

No comments:

Post a Comment