Friday, July 31, 2020

அதிகரிக்கும் சுமந்திரன் மீதான எதிர்ப்புகள்!

அதிகரிக்கும் சுமந்திரன் மீதான எதிர்ப்புகள்! இப்பெல்லாம் பொழுது விடிகிறதோ இல்லையோ சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் மட்டும் தவறாமல் வந்து கொண்டிருக்கின்றன. இதோ அடுத்த எதிர்ப்பு வந்துள்ளது. இது புலத்தில் இருந்து வந்துள்ளது. சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கையையும் மகிந்த ராஜபக்சாவையும் காப்பாற்றுவதே சுமந்திரனின் நீண்ட காலத்திட்டம் என்று பொஸ்கோ அவர்கள் கூறியுள்ளார். ஜெனிவா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னாட்டு தளங்களில் தமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ பொஸ்கோவின் இந்த குற்றச்சாட்டிற்கு சுமந்திரன் உரிய பதிலை அளிக்கமாட்டார். மாறாக வழக்கம்போல் பொஸ்கோவையும் மகிந்தவின் ஆள் என்றே கூறப்போகிறார். ஆனால் உண்மையில் சுமந்திரனே மகிந்த ராஜபக்சாவை காப்பாற்றி வருகின்ற மகிந்தவின் ஆள். அதனால்தான் சுமந்திரனுக்குரிய சிங்கள பொலிஸ் பாதுகாப்பை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கி வருகிறார் மகிந்த ராஜபக்சா. Image may contain: 2 people, including Anthonippillai Reginoldraj, suit and close-up

No comments:

Post a Comment