Thursday, January 30, 2020

•ரஞ்சன் லீக்ஸ்!

•ரஞ்சன் லீக்ஸ்! விக்கி லீக்ஸ் போல் இலங்கையில் இப்போது ரஞ்சன் லீக்ஸ் பேமஸ் ஆகியுள்ளது. நடிகைகள், நீதிபதிகள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் ரஞ்சன் ராமநாயக்கவுடன் பேசிய ஒலிப்பதிவுகள் லீக்காகி கொண்டிருக்கின்றன. இதனால் இலங்கை அரசு வேறு வழியின்றி மீண்டும் ரஞ்சன் ராமநாயக்காவை கைது செய்துள்ளது. இதுவரை வெளிவந்திருப்பது சொற்பம் என்றும் இன்னும் அதிகளவு வெளிவர இருக்கின்றன என்று கூறுகிறார்கள். வெளிவந்த சொற்பத்திற்கே இலங்கை ஆட்டம் காணுது. முழுவதும் வந்தால் என்னவாகும் என்று தெரியவில்லை. இதுவரை வெளிவந்திருக்கும் உரையாடல்கள் சிங்களத்தில் இருப்பதாலும் சம்பந்தப்பட்டவர்கள் சிங்கள பிரமுகர்களாக இருப்பதாலும் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் இந்த விடயம் முக்கியம் பெறவில்லை. ஒருவேளை யாராவது தமிழ் பிரமுகரின் உரையாடல் ஏதும் இனி வந்தால் சில|வேளை தமிழ் மக்களின் கவனத்தைத் திருப்பக்கூடும். ரஞ்சன் ராமநாயக்கா நடிகர் ரஜனியுடனும் உரையாடியுள்ளார். எனவே ரஞ்சன் லீக்ஸில் சிலவேளை ரஜனியின் உரையாடல் பதிவும் இருக்கக்கூடும். இந்த உரையாடல்களை பதிவு செய்யும் திட்டத்தை ரஞ்சனுக்கு கூறியவர் சுமந்திரன் என்று சிங்களப் பத்திரிகை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. அந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ரஞ்சன் மீதான விசாரணையின்போது உண்மைகள் வெளிவரக்கூடும். ரஞ்சன் புத்த பிக்குகள் மத்தியில் இருக்கும் பாலியல் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் பழிவாங்கப்படுகிறார் என்று கூறுகிறார்கள். இப்போது தமிழ் மக்கள் முன் உள்ள பிரச்சனை என்னவென்றால் இது சிங்களத்திற்குள் நடக்கும் பிரச்சனை என்று பேசாமல் இருப்பதா அல்லது நாளை தமிழரையும் இந்த அரசு பழிவாங்கும் என்பதால் ரஞ்சன் கைதை கண்டிப்பதா என்பதே. Image may contain: 2 people, people smiling, people standing

No comments:

Post a Comment