Thursday, January 30, 2020

•“துக்ளக்” குருட்டு மூர்த்தியின் பிதற்றல்!

•“துக்ளக்” குருட்டு மூர்த்தியின் பிதற்றல்! துக்ளக் 15.01.20 இதழில் அதன் ஆசிரியர் குருட்டுமூர்த்தி மன்னிக்கவும் குருமூர்த்தி பின்வரும் அமைப்புகளை கண்காணிக்க வேண்டும், விசாரணை செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார். •நாம் தமிழர் கட்சி •தமிழக வாழ்வுரிமைக் கட்சி •மே 17 இயக்கம் •தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் •தமிழ்தேச மக்கள் கட்சி •இளந்தமிழகம் •தமிழ்தேசிய முன்னணி •தமிழர் எழுச்சி இயக்கம் •பூவுலகின் நண்பர்கள் •சிவில் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் •சமநீதி வக்கீல்கள் சங்கம் •பெண்கள் எழுச்சி இயக்கம் என மொத்தம் 45 அமைப்புகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். இவ் அமைப்புகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்றன. இவ் அமைப்புகள் வெளிப்படையாக இயங்குகின்றன இவ் அமைப்புகள் பொலிஸ் மற்றும் நீதிமன்ற அனுமதிகள் பெற்றே பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தகின்றன. ஆனால் குருட்டுமூர்த்தி இவற்றை சட்ட விரோத இயக்கங்கள் என்றும் இவற்றை கண்காணித்து விசாரணை செய்ய வேண்டும் என்கிறார். இவ் அமைப்புகள் RSS போன்று பயிற்சி எடுக்கவில்லை ஆயுதங்களை வைத்திருக்கவில்லை மாட்டிறைச்சி சாப்பிட்டதாககூறி முஸ்லிம்களை கொல்லவில்லை தமக்கு எதிராக கருத்துக்கூறியதாக புத்திஜீவிகள் எவரையும் சுட்டுக் கொல்லவில்லை கிருத்தவ பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லவில்லை ஆனால் இத்தனையும் செய்யும் RSSல் உறுப்பினராக இருக்கும் இந்த குருட்டுமூர்த்தி தமிழ் உணர்வு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். இதைவிட மோசம் என்னவெனில் இப்படி எழுதும் துக்ளக் இதழை வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்று மராட்டிய இன நடிகர் ரஜனி கூறுவதுதான். இப்படி ஒருவர் கர்நாடா சென்று கன்னடர்களுக்கு எதிராக எழுத முடியுமா? அல்லது எழுதிவிட்டு கர்நாடகாவில் இருந்துவிட முடியுமா? ஆனால் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர்களுக்கு எதிராக எப்படி இவர்களால் இந்தளவு தைரியமாக எழுத முடிகிறது? Image may contain: 2 people, people smiling, text

No comments:

Post a Comment