Thursday, January 30, 2020

•தமிழ்நாடும் தமிழீழமும் !!

•தமிழ்நாடும் தமிழீழமும் !! 51 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று பெயர் பெற்ற நாள் இன்று. தனிநாடு கேட்டு போராடிய அறிஞர் அண்ணா அந்த போராட்டத்தை கைவிட்டிருந்தாலும் “தமிழ்நாடு” என்று பெயரையாவது சூட்டினார். அதுமட்டுமல்ல தனிநாட்டுக்கான போராட்டத்தை கைவிட்டபோது “ தனிநாட்டுக்கான காரணங்கள் யாவும் அப்படியே இருக்கின்றன” என்றார். ஆனால் நமது தலைவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணம் கிடைத்தபோது அதற்கு “தமிழீழம்” என்று பெயர் வைக்கவும் முயற்சி செய்யவில்லை. 2009க்கு பின்னர் தமிழீழத்தை கைவிட்டபோதும் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பதையும் கூற விரும்பவில்லை. இவர்களிடம் அறிஞர் அண்ணாவிடம் இருந்த அரசியல் நேர்மைகூட இருக்கவில்லை. இவர்கள் கட்சி ஆரம்பிக்கும்போதே தமிழில் தமிழரசுக்கட்சி என்றும் ஆங்கிலத்தில் சமஷ்டிக்கட்சி (பெடரல் பார்ட்டி) என்றும் பெயர் வைத்து ஏமாற்றியவர்களாச்சே! இன்னும் வேடிக்கை என்னவெனில் தமிழீழம் கேட்கும் தைரியம் இருக்கா என்று இவர்களின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மக்களை பார்த்து நக்கலாக கேட்கிறார். எல்லாம் நேரம்தான்டா! Image may contain: 1 person, smiling, possible text that says 'Madras State என்று இருந்த பெயரைத் தமிழ்நாடு என 14/1/69 UFROD அறிஞர் அண்ணா பெயர் மாற்றம் செய்த தினம் இன்று..!'

No comments:

Post a Comment