Thursday, January 30, 2020

•மனோ கணேசனும் ராஜபக்சவும்!

•மனோ கணேசனும் ராஜபக்சவும்! சிஜடி பொலிசார் - மனோ கணேசன் அவர்களே! ராஜபக்சா ஒரு முட்டாள் என்று நீங்கள் பேசியுள்ளீர்கள். எனவே அதி உத்தம ஜனாதிபதி அவர்களை முட்டாள் என்று பேசியதற்காக உங்களை கைது செய்ய வந்துள்ளோம். மனோ கணேசன் - நான் விஜயதாச ராஜபக்சவையே முட்டாள் என்று பேசினேன். அவர் அரசியல் அமைப்பில் செய்ய கொண்டுவந்த தீர்மானம் முட்டாள்தனமானது என்பதையே சுட்டிக் காட்டியுள்ளேன். சிஜடி பொலிசார் - மன்னிக்கவும் மனோ கணேசன் அவர்களே. நீங்கள் எங்களை ஏமாற்ற முடியாது. ஏனெனில் ராஜபக்சாக்களில் கோத்தபாயா ராஜபக்சாவே அடிமுட்டாள் என்பது எமக்கு நன்கு தெரியும். மனோ கணேசன் - ????? குறிப்பு - இது ஒரு பகிடி உரையாடல்தான். ஆனால் இது உண்மையானதும்கூட. இந்தியாவில் ஒரு சமூக ஆர்வலர் மோடி ஒரு முட்டாள் என்று கூறியதற்காக பொலிசார் கைது செய்வார்கள். அப்போது அந்த சமூக ஆர்வலர் நான் நீரவ் மோடியைத்தான் கூறினேன் என்பார். ஆனால் பொலிசார் பிரதமர் மோடி முட்டாள் என்பது எமக்கு நன்கு தெரியும். எனவே அவரைத்தான் நீங்கள் கூறியிருக்கிறீர்கள் என்று கைது செய்வார்கள். இந்த பகிடியை படித்ததும் எனக்கு மனோ கணேசன் பகிடி நினைவுக்கு வந்தது. Image may contain: Mano Ganesan, sitting Image may contain: 1 person, smiling, close-up

No comments:

Post a Comment