Sunday, July 29, 2018

அடேய்! ஏலுமெண்டால் எங்கட “தலை” யிலை கைவையுங்கடா பார்ப்பம்!

அடேய்!
ஏலுமெண்டால் எங்கட “தலை” யிலை கைவையுங்கடா பார்ப்பம்!
“புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி அழித்தது தவறு. அவர்களின் போராட்டம் நியாயமானது” என்று எங்கட “தல” சம்பந்தர் அய்யா கூறியிருக்கிறார்.
ஏலுமெண்டால் விஜயகலாவின் பதவியை பறித்தது போல் எங்கட “தலை” யின்ட பதவியை பறியுங்கடா பார்ப்பம்!
அல்லது, விஜயகலாவை விசாரணை செய்வதுபோல் எங்கட “தலை” யை விசாரணை செய்யுங்கடா பார்ப்பம்!
அல்லது, பிரபாகரன் படத்தை கொளுத்தியது போன்று எங்கட “தலை” யின்ரை படத்தை கொளுத்துங்கடா பார்ப்பம்!
அல்லது, விஜயகலாவுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறியதுபோல் எங்கட “தலை” க்கும் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறுங்கடா பார்ப்பம்!
என்ன? எங்கட “தலை” யிலை கை வைத்தால் இந்தியா தலையிடும் என்று பயப்படுகிறீர்களா?
அல்லது, எங்கட “தலை” யிலை கை வைத்தால் அமெரிக்க தூதுவர் கேட்பார் என்று அச்சப்படுகின்றீர்களா?
பெட்டைப்பிள்ளையிட்ட உங்கட வீரத்தைக் காட்டுறீங்கயேடா. முடியுமென்டால் எங்கட “தலை” யிட்ட உங்கட வீரத்தைக் காட்டுங்கடா பார்ப்பம்!
குறிப்பு- ஏதோ எம்மால முடிந்தது. பத்த வைச்சிரூக்கு. பத்துதா என்று பார்ப்பம்.

No comments:

Post a Comment