Sunday, July 29, 2018

•மீண்டும் புலிகளை உருவாக்குவோம்- அமைச்சர் விஜயகலா

•மீண்டும் புலிகளை உருவாக்குவோம்- அமைச்சர் விஜயகலா
அன்புள்ள கலா அக்காவுக்கு!
“நல்லாட்சி” ஜனாதிபதி தலைமையில் உங்கள் பிள்ளைகளுக்கு செய்த அரங்கேற்றத்தை மறந்துவிடுவோம்
மாணவி வித்யா கொலையாளிகளை காப்பாற்ற நீங்கள் செய்த உதவிகளையும் மறந்துவிடுவோம்.
ஆனால் நீங்கள் இப்ப தமிழில் பேசிய விடயத்தை ஒருக்கால் சிங்களத்தில் பாராளுமன்றத்தில் பேசினால் போதும்.
ஆனால் ஒரு விடயத்தில் உண்மை பேசியுள்ளீர்கள். அதாவது புலிகள் உருவாதில்லை. உருவாக்கப்படுகிறார்கள் என்பதை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் இந்த உண்மையை ஒருமுறை கூறியிருக்கிறார்.
அதாவது கடந்தகாலங்களில் இலங்கை அரசு செய்த தவறுகளினாலே பிரபாகரன்கள் உருவாகிறார்கள் என்றார் அவர்.
இப்போது நீங்களும் “புலிகளை உருவாக்குவோம்” என்பதின் ஊடாக இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.
தேர்தல்கள் நெருங்குகின்றன. இதுவரை கொழும்பில் ஏசி அறையில் கொகுசாக இருந்தவர்கள் எல்லாம் மக்களை சந்திக்க வரப்போகின்றனர்.
ஆனால் இம்முறை மக்கள் யார் பேச்சையும் நம்பப் போவதும்மில்லை. ஏமாறப் போவதுமில்லை.

No comments:

Post a Comment