Sunday, July 29, 2018

கலைஞர் கருணாநிதி துரோகம் இழைத்தது

•கலைஞர் கருணாநிதி துரோகம் இழைத்தது
டெலோ தலைவர் குட்டி மணிக்கா?
அல்லது அகதி சிறுவன் மணிக்கா?
கலைஞர் கருணாநிதி டெலோ தலைவர் குட்டி மணிக்கு துரோகம் இழைத்ததாக இன்று சிலர் முகநூலில் பதிவு செய்துள்ளனர்.
கலைஞர் கருணாநிதி குட்டி மணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தது உண்மைதான்.
அந்த காலத்தில் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் பரஸ்பரம் பரிமாறப்படும் நடவடிக்கையின் கீழேதான் குட்டிமணியும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஒப்படைக்கப்பட்ட குட்டிமணி சில மாதங்களில் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் இலங்கை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அப்போது தொடரப்பட்ட வழக்கில்தான் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்காக அவர்கள் வெலிக்கடை சிறையில் வைக்கப்பட்டிருந்தவேளையில் 23.07.1983 யன்று அரசின் சதித்திட்டபடி சக சிங்கள கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர், “குட்டிமணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதி” என்று சட்டசபையில் எம்.ஜி.ஆர் குற்றம் சாட்டினார்.
இதனால் “ கருணாநிதியால் ஒப்படைக்கப்பட்ட போது எமது தலைவர் குட்டிமணி போராளி இல்லை. கடத்தல்காரன்” என்று அப்போதைய டெலோ தலைவர் சிறீசபாரட்ணம் கருணாநிதிக்காக பேட்டி கொடுத்தார்.
இங்கு கருணாநிதி செய்த அசிங்கமான அரசியல் தான் தப்புவதற்காக “தமது தலைவர் கடத்தல்காரன”; என்று டெலொ தலைவர் மூலம் பேட்டி கொடுக்க வைத்ததே.
உண்மையில் குட்டிமணிக்கு கருணாநிதி எந்த துரோகமும் செய்யவில்லை.
ஆனால் அவர் அப்பாவி அகதி சிறுவன் மணிக்கு செய்த துரோகம் ஒரு போதும் மன்னிக்க முடியாதது.
ஈழத் தமிழர் மீது எம்.ஜி ஆரை விட தனக்கே பாசம் அதிகம் என்று காட்டுவதற்காக ஒரு ஈழஅகதிச் சிறுவனை தத்து எடுத்து வளர்த்தார் கருணாநிதி.
அந்த ஈழஅகதிச் சிறுவனுக்கு மணி என்று பெயரும் சூட்டினார் கருணாநிதி.
ஆனால் இப்போது அந்த அகதிச் சிறுவனை காணவில்லை. அவனுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை.
சொத்தில் பங்கு கொடுக்க வேண்டி வருமே என்று ஸ்டாலின் அடித்து விரட்டிவிட்டார் என அப்போது சிலர் கூறினார்கள்.
ஆனால் ஸ்டாலினின் வலது கையாக விளங்கிய பரிதி இளம்பரிதி திமுக வைவிட்டு வெளியேறிய போது இந்த அகதி சிறுவனுக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பினார்
அதாவது இந்த அகதி சிறுவன் ஸ்டாலினால் அடித்தக் கொல்லப்பட்டுவிட்டார் என்றே அவர் குற்றம் சாட்டினார்.
கருணாநிதி தன் வாழ்வின் இறுதி நாட்களை தற்பொது எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்திலாவது அந்த அப்பாவி அகதி சிறுவனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அவர் ஈழத் தமிழர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment