Sunday, July 29, 2018

•இந்த சமூகவிரோதிக் குழந்தைக்கும் சீனாவில் இருந்து பணம் வருகிறதா?

•இந்த சமூகவிரோதிக் குழந்தைக்கும்
சீனாவில் இருந்து பணம் வருகிறதா?
தமிழக அரசுக்கு எதிராக போராடுபவர்களை சமூக விரோதிகள் என்கின்றனர்.
அதுமட்டுமல்ல இச் சமூகவிரோதிகளுக்கு சீனாவில் இரந்து பணம் வருகின்றது என்றும் கற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக அரசின் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக நேற்றைய தினம் லண்டன் இந்திய தூதராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் இச் சிறுமியும் கலந்துகொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
பொதுவாக இந்த நேரத்தில் சிறுவர்கள் கடற்கரைக்கோ அல்லது பார்க்கிற்கோ சென்று விளையாடுவதையே சிறுவர்கள் விரும்பவார்கள்.
ஆனால் இந்த சிறுமி மிகவும் மகிழ்வுடன் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். போராட்டம் இன்ப மயமானது என்பது உண்மைதான்.
இப்போது எமது கேள்வி என்னவெனில் இந்த குழந்தையும் சீனாவின் பணத்தை வாங்கிக்கொண்டுதான் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றியதா?
இந்த குழந்தையின் போராட்டம் எட்டுவழிச்சாலையை நிறுத்துகிறதோ இல்லையோ ஆனால் உலகில் உள்ள தமிழர்களின் ஒற்றுமைக்கு வழி கோலுகின்றது என்பது உண்மை.
ஏனெனில் பற்றி எரிந்த பெரும் தீயெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்துதானே ஆரம்பித்தது.
அதுபோல் உலக தமிழினத்தின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு வழி சமைக்கும் சிறு பொறியாய் இந்த சிறுமி இருப்பது மறுக்க முடியாத உண்மை.
எடப்பாடி பழனிச்சாமியே
இனி என்ன செய்யப்போறாய்?

No comments:

Post a Comment