Sunday, July 29, 2018

அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி இன்று தற்கொலை செய்து கொண்டது

அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி
இன்று தற்கொலை செய்து கொண்டது
நிறம் மாறுவதில் சம்பந்தர் அய்யாவிடம்
தான் தோற்றுப்போய்விட்டதாக அது கூறியது.
புலிகளின் போராட்டம் நியாயமானது என்றார்- ஆனால்
அதையே விஜயகலா கூறியதும் கண்டனம் தெரிவிக்கிறார்
தேர்தலுக்கு முன்னர் டக்லஸ் ஒட்டுக்குழு என்றார்- ஆனால்
தேர்தலுக்கு பின்னர் அதே டக்லஸ் யுடன் கைகோர்ப்பு
தேர்தலுக்கு முன்னர் மகிந்தர் மிரட்டினார் என்று அறிக்கை
தேர்தலுக்கு பின்னர் மகிந்தருக்கும் அழைப்பு விடுப்பு
பதவிக்காக சம்பந்தர் அய்யா அடிக்கும் பல்டி
பச்சோந்தியையே மிஞ்சிவிடும் திறன் கொண்டது.
இத்தனை கேவலம் சம்பந்தருக்கு தேவைதானா?
இத்தனைநாள் பதவிசுகம் அனுபவித்தது போதாதா?
இனியாவது ஒதுங்கி மற்றவர்களுக்கு வழி விட்டால் என்ன?

No comments:

Post a Comment