Tuesday, June 30, 2015

தமிழ் மக்களே எச்சரிக்கை!

 தமிழ் மக்களே எச்சரிக்கை!
அன்று அன்னை சோனியாவின் கண்களில் ஈரம் கண்டவர்
இன்று இலங்கை அரசுடன் பேச்சுவாhத்தை நடத்துகிறார்
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு இந்தியாவே முழு உதவி புரிந்தது என்பதை யாவரும் அறிவர்.
இன்றும்கூட இலங்கை அரசை இந்தியாவே பாதுகாத்து வருகின்றது என்பதும் யாவரும் அறிவர்.
இத்தகைய இந்தியாவின் அன்னை சோனியா காந்தி லண்டன் வந்தபோது அவரை சந்தித்த சுரேன் என்பவர் " அன்னை சோனியாவின் கண்களில் ஈரத்தைக் கண்டேன்" என்றார் கொஞ்சம் கூட வெட்கம் இன்றி.
முள்ளிவாய்க்காலில் பலியானவர்களின் ரத்தம் காயுமுன்னர் அதற்கு காரணமான கொலைகாரிக்கு ஆதரவாக குரல் கொடுத்தமை கண்டு தமிழ்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அன்னை சோனியா காந்திக்காக வக்காலத்து வாங்கியவர் தற்போது ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அரசுடன் பின் கதவால் பேச்சுவாhத்தை நடத்துகிறாராம்.
இந்திய உளவுப்படை தயாரித்த இந்த கபட நாடகத்தை புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் சிறப்பாக அரங்கேற்ற சிலர் முயல்கிறார்கள்.
வரும் செப்டெம்பர் மாதம் ஜ.நா விசாரணையில் இருந்து இலங்கை அரசைக் காப்பாற்ற இந்த துரோகிகள் துணை போகிறார்கள்.
• சிறையில் உள்ளவர்கள் இன்னும் விடுவிக்கப்ட வில்லை
• மக்கள் இன்னும் தமது நிலங்களில் மீள் குடியேற்றப்படவில்லை
• காணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை
• பாதிக்கப்ட்டவர்கள் புனர் வாழ்வு அளிக்கப்படவில்லை
இந்த நிலையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை என்ன வேண்டிக்கிடக்கு?
மக்களே!
துரோகிகளை இனங் காணுங்கள்!
இந்திய உளவுப்படைக்கு விலை போனவர்களை தூக்கியெறியுங்கள்.!!

No comments:

Post a Comment