Tuesday, June 30, 2015

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது

• பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது
• இந்திய அரசுக்காக கலைஞரும் கனிமொழியும் செய்த துரோகம் வெளியே வந்துவிட்டது
• இனி கலைஞரும் கனிமொழியும் என்ன சொல்லப்போகிறார்கள்?
இறுதி யுத்தத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செலுத்தியது என்றும் தமிழர்களை அழித்து ஒழித்துவிட்டு ஆறு ஆண்டுகளாகியும் இந்தியா மௌனத்தில் இருப்பதாக ஆனந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசின் பிராணாப் முகர்ஜி, நம்பியார், சிவசங்கர் மேனன் ஆகியோரின் திட்டத்திற்கு அமைய கனிமொழியே சரணடையுமாறு தொலைபேசியில் 16.05.2009 யன்று இரவு கூறியதாகவும் அதற்கு உயிருடன் இருக்கும் நேரடியான சாட்சி தானேயென்றும் ஆனந்தி கூறியுள்ளார்.
சோனியாகாந்தியின் இந்திய அரசுக்கு கனிமொழி ஏன் உதவினார்?
தமிழின படுகொலைக்கு கலைஞர் ஏன் ஒத்துழைப்பு வழங்கினார்?
இது மிகப் பெரும் இனத் துரோகம் இல்லையா?
இந்திய அரசின் விசுவாசிகள் இதற்கு பதில் தருவார்களா?
40 அயிரம் தமிழ் மக்களை அழிப்பதற்கு உதவி புரிந்த கலைஞரும் கனிமொழியும் இப்போது தமிழீழத்திற்காக "டெசோ" மாநாடு நடத்துகிறார்கள்.
தமிழின அழிப்பை நடத்திய இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு விடுதலை பெற்று தரும் என இன்னமும் சிலர் சொல்லிக்கொண்டு திரிகின்றனர்.
இதுதான் கேட்பவன் கேனையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்ற கதையாகும்!
ஆனால் இவர்களை இனியும் நம்புவதற்கு தமிழ் மக்கள் ஒன்றும் கேனையர்கள் அல்லர்!

No comments:

Post a Comment