Wednesday, December 30, 2015

•சில தலைவர்கள் தமிழ் மக்களுக்காக உயிரை விட்டிருக்கிறார்கள்

•சில தலைவர்கள் தமிழ் மக்களுக்காக உயிரை விட்டிருக்கிறார்கள்
•சில தலைவர்கள் தமிழ் மக்களுக்காக தமது சொத்தை இழந்துள்ளார்கள்
•ஆனால் தலைவர் சம்பந்தர் அய்யா மட்டும் தமிழ் மக்களின் சொத்தை திருட முனைகிறாரா?
திருகோணமலையில் லிங்கா நகர் என்னும் இடம் 6 ஏக்கர் நிலம் கொண்டது. இதில் 56 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இந்த இடத்தை ஏற்கனவே வாழ்ந்த சிங்கள மக்களிடமிருந்து பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்.
இப்போது திடீரென சம்பந்தர் அய்யா இது தனக்கு சொந்தமான இடமென்றும் இதற்கு ஒரு பேர்ச் 25 ஆயிரம் ரூபா வீதம் மொத்தம் 2 கோடியே 40 லட்சம் ருபா தனக்கு தரவேண்டும் என மிரட்டுகிறார்.
இது ரசூல்பாய் என்னும் முஸ்லிம்க்கு சொந்தமான நிலமாகும். தற்போது அந்த குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை. எனவே சம்பந்தர் அய்யா வழக்கம்போல் கள்ள உறுதி முடித்து வைத்துக்கொண்டு அந்த அப்பாவி தமிழ்மக்களை மிரட்டுவதாக சந்தேகம் எழுந்தள்ளது.
சம்பந்தர் அய்யா எற்கனவே ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு இப்படி அப்பாவி மக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. அப்படியிருக்க தமிழ் மக்களின் பெரிய தலைவராக இருப்பவர் இப்படி செய்யலாமா?
வேறு யாராவது இப்படி தமிழ் மக்களை ஏமாற்றி சம்பாதிக்க முனையும்போது அதை தடுத்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய தலைவரான சம்பந்தர் அய்யாவே தமிழ் மக்களை இப்படி ஏமாற்றி பிழைக்க முனைந்தால் அந்த மக்கள் இனி யாரிடம் சென்று முறையிட முடியும்?
சம்பந்தர் அய்யா ஒரு வருடத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவது இருக்கட்டும். முதலில் இந்த லிங்கா நகர் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல தீர்வை பெற்றுக் கொடுக்கட்டும்.
குறிப்பு- சம்பந்தர் அய்யா லண்டன் வந்தபோது லிங்கா நகர் மக்கள் எழுதிய கடிதம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தான் நல்ல தீர்வு வழங்குவதாக கூறினார். ஆனால் இதுவரை எதுவுமே செய்யவில்லை.

No comments:

Post a Comment