Wednesday, December 30, 2015

தமிழ் மக்களின் போராட்டம் "சுமந்திரன்" களை மட்டுமல்ல "லண்டன் பாபா" க்களையும் கடந்து போகும்!

•தமிழ் மக்களின் போராட்டம் "சுமந்திரன்" களை மட்டுமல்ல "லண்டன் பாபா" க்களையும் கடந்து போகும்!
கடந்த மாதம் லண்டனில் மாவீரர் உரையாற்றிய லண்டன் பாபா இந்த மாதம் இலங்கை சென்று பிரதமர் ரணிலுடன் கை குலுக்கியுள்ளார். இந்த படத்தை அனுப்பி எனது கருத்தை தெரிவிக்கும்படி ஒரு அன்பர் கேட்டிருக்கிறார்.
என்னத்தை சொல்ல? இதைப் போல இன்னும் பலர் விரைவில் கை குலுக்கும் போட்டோக்கள் வரும். அதெயெல்லாம் தாங்கும் சக்தி இந்த அப்பாவி தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதைத் தவிர.
லண்டன் பாபாவை எனக்கு சிறுவயதில் இருந்து தெரியும். 1983 ல் இளைஞர்கள் எல்லாம் இயக்கங்களுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் இவர் தனது வீட்டில் கலர் பல்ப்புகள் போட்டு ஆங்கிலப் பாடலுக்கு டிஸ்கோ ஆடியதை ரோட்டில் இருந்து வேடிக்கை பார்த்த இளைஞர்களில் நானும் ஒருவன்.
அப்போது இவரது செயல்கள் எமக்கு வேடிக்கையாகவும் பையித்தியக்காரத்தனமாக இருந்தது. ஆனால் நாங்கள் யாருமே இவர் 2015ல் தமிழ் மக்களை பையித்தியமாக்குவார் என்று உண்மையில் எதிர்பார்க்கவேயில்லை.
அதேபோல் லண்டன் வந்து அவர் ரஜனி பாடலுக்கு ஆடி "லண்டன் பாபா" பட்டத்தையும் விரும்பி சூட்டிக கொண்டதும்;கூட எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. ஆனால் அவர் திடீரென புலிகளின் மேடையில் தோன்றி ஆரம்பகால போராட்ட வரலாறுகள குறித்து முழங்கியதைத்தான் என்னால் இன்றும்கூட தாங்க முடியாமல் இருக்கிறது.
இவருடைய அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் பிரபாகரன். இந்த பிரபாகரன் நெல்லியடி சண்டியர்களில் ஒருவர். 1978ல் கோஸ்டி சண்டைக்கு துப்பாக்கியால் சுட்டு பிரபலமானவர். பின்னர் லண்டன் சென்றுவிட்டார். இந்நிலையில் 1984ல் ஊருக்கு வர விரும்பி வேதாரணியத்தில் எங்களிடம் உதவி கேட்டார். நாங்களும் அவர் மீது இரக்கப்பட்டு எமது வள்ளத்தில் ஏற்றி வந்தோம்.
எமது வள்ளம் நாகர்கோயில் கடற்கரையை அண்மித்த போது திடீரென இலங்கை கடற்படை சுடத் தொடங்கி விட்டது. இதனை எதிர்பாராத நாங்கள் ஒருவாறு குதித்து தப்பி விட்டோம். ஆனால் எமது வள்ளமும் அதில் இருந்த பொருட்களையம் கடற்படை கைப்பற்றிவிட்டது.
அதில் எம்முடன் வந்த பிரபாகரன் அடையாள அட்டையும் சிக்கிவிட்டது. உடனே இலங்கை அரசு புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவருடன் கூட வந்த 17 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக வானொலியில் அறிவித்தது.
இதுதான் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முதலாவது மரண விபரமாகும்

No comments:

Post a Comment