Wednesday, December 30, 2015

•"சின்ன கதிர்காமர்" மன்னிக்கவும் சுமந்திரன் அவர்களுடன் ஒரு உரையாடல்!

•"சின்ன கதிர்காமர்" மன்னிக்கவும் சுமந்திரன் அவர்களுடன் ஒரு உரையாடல்!
கேள்வி- உங்களை சின்ன கதிர்காமர் என்று அழைப்பது பற்றி..?
சுமந்திரன்- நான் நீலன் மற்றும் கதிர்காமர் ஆகியோரைவிட விண்ணன்( கெட்டிக்காரன்) எனவே என்னை சின்ன கதிர்காமர் என்று அழைக்க முடியாது.
கேள்வி- இன்றைய அரசு நல்லாட்சி செய்கிறது என்று எப்படி கூறுகிறீர்கள்?
சுமந்திரன்- மகிந்த 12000 சிறைக் கைதிகளை விடுதலை செய்தார். ஆனால் இந்த அரசு 700 பேரைக்கூட விடமுடியாது என்று கூறுகிறதே. அப்படியென்றால் இது நல்லாட்சிதானே!
கேள்வி- நவம்பர் 7ம் திகதி முன்னர் அனைத்து சிறைக் கைதிகளையும் விடுதலை செய்வதாக கூறிய அரசு அதன்படி விடுதலை செய்யவில்லையே?
சுமந்திரன்- ஆம் உறுதியளித்தபடி அரசு விடுதலை செய்யவில்லைதான். ஆனால் அதற்காக அரசு மீது நம்பிக்கை இழக்க தேவையில்லை. ஏனெனில் அரசு தமிழர்களுக்கு தீர்வு தரவுள்ளது.
கேள்வி- சிறைக் கைதிகளையே விடுதலை செய்யாத அரசு இனப் பிரச்சனைக்கு தீர்வு தரும் என எப்படி நம்புவது?
சுமந்திரன்- சிறைக் கைதிகள் விடுதலை ஒரு சின்ன விடயம். தீர்வு என்ற பெரிய விடயத்திற்காக சின்ன விடயங்களை நாம் கவனிக்காது விட வேண்டும்.
கேள்வி- சிறைக் கைதிகள் விடுதலை என்ற சின்ன விடயத்தையே செய்யாத அரசு எப்படி தீர்வு என்ற பெரிய விடயத்தை செய்யும் என நம்புவது?
சுமந்திரன்- நாம் நம்ப வேண்டும் என்று கூறுகிறேன். இப்ப புரிகிறதா நான் கதிர்காமரை விட விண்ணன் என்று.
கேள்வி- சம்பந்தர் அய்யா ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவதாக கூறினாரே?
சுமந்திரன்- ஆம். அதனால்தான் விக்கினேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூறுகிறேன்.
குறிப்பு- சுமந்திரன் கதிர்காமரை விட தான் விண்ணன் என்கிறார். எனவே அவரிடம் தீர்வுக்கும் விக்கினேஸ்வரன் மீதான நடவடிக்கைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கக்கூடாது அல்லவா!

No comments:

Post a Comment