Wednesday, December 30, 2015

• ஆராரோ ஆரிவரோ ! தூங்கு மகனே நல்லாய் தூங்கு!!

• ஆராரோ ஆரிவரோ !
தூங்கு மகனே நல்லாய் தூங்கு!!
இந்த தள்ளாத வயதிலும் பதவியை விடாது பிடித்துக்கொண்டு
மக்களுக்காக(!) உழைத்த களைப்பில் தூங்கும் எமது தலைவர்கள்.
சிறையில் உள்ளவர்களை விடுவிக்க நடத்திய போராட்டக் களைப்பு,
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க நடத்திய போராட்டக் களைப்பு,
காணிகளை மீட்க நடத்திய போராட்டக் களைப்பு,
எனவே, பாவம் அவர்கள் சிறிது உறங்கட்டும்
தொந்தரவு செய்யாதீர்கள். விட்டு விடுங்கள்.
என்ன பு--க்கு இவர்களை தெரிவு செய்தோம் என
சிலர் பீப் சாங் பாணியில் திட்டுகிறார்கள்.
அப்படி தரக் குறைவாக திட்டாதீர்கள்.
என்ன இருந்தாலும் அவர்கள் எமது தலைவர்கள் அல்லவா!
மீண்டும் மீண்டும் சம்பள உயர்வு
போதாக்குறைக்கு சொகுசு வாகனம்.
வார இறுதியில் இந்தியன் தூதரலாயத்தில் தண்ணி பார்ட்டி
ஏன் இவர்கள் பதவியை விடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா?
சிறிய உறக்கம் அல்ல நீண்ட உறக்கம் கொள்ளட்டும் (செத்து தொலையட்டும்) என சிலர் விரும்பலாம். ஆனால் இதை விட்டால் அவர்கள் வேறு என்ன வேலைக்கு போக முடியும்?
தலைவர்கள் தூங்கலாம். ஆனால் மக்கள் தூங்கவில்லை. விழித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை அடுத்த தோர்தலில் இவர்களுக்கு காட்டுவார்கள். இது உறுதி.

No comments:

Post a Comment