Wednesday, December 30, 2015

கடல் நீரை குடிநீராக மாற்றுவதால் கடற் தொழில் பாதிக்குமா?

கடல் நீரை குடிநீராக மாற்றுவதால் கடற் தொழில் பாதிக்குமா?
உலகில் பல இடங்களில் கடல்நீர் குடிநீராக மாற்றப்படுகிறது. ஆனால் அங்கு எல்லாம் கடற்தொழில் பாதிக்கப்படுவதாக யாரும் போராட்டம் நடத்தவில்லை.
இந் நிலையில் மருதங்கேணியில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் குடி நீருக்கு பாரிய தட்டுப்பபாடு எற்பட்டு வருகிறது.
யாழ் குடாநாட்டில் மழை நீரை சேமிக்க பாரிய குளங்கள் இல்லை.
இரணைமடுக் குளத்தில் இருந்து குடிநீர் கொண்டுவர எடுத்த முயற்சியும் சிறீதரன் எம்.பி யின் சுயநல அரசியலால் தடுக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தாவிடில் என்னதான் தீர்வு?
யாருக்காவது இது குறித்து உண்;மையில் அக்கறை இருக்கிறதா?
மழை நீரோ அல்லது குளத்து நீரோ இல்லாத இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.
எனெனில் இத் திட்டம் குளத்து நீரை கொண்டு வரும் திட்டத்தைவிட அதிக செலவானது.
எனவே மகாவலி நீரை இரணைமடுவிற்கு கொண்டு வருவதன் மூலம் கிளிநொச்சி விவசாயகளுக்கும் தேவையான நீரை கொடுக்கலாம். யாழ் குடா நாட்டிற்கும் குடி நீராக எடுத்துச் செல்லலாம்.
இதற்கு ஆரம்பத்தில் அதிக பணம் தேவைப்படும். ஆனால் இதுவே செலவு குறைந்த சிறந்த பல பயன்கள் கொண்ட திட்டமாகும்.
எனவே அரசியல் தலைவர்கள் தமது சுயநல நோக்கத்தை கைவிட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தை அமுல்படுத்த முனைய வேண்டும்.

No comments:

Post a Comment