Wednesday, December 30, 2015

தமக்கான சம்பள உயர்வை ஒற்றுமையாக பெற்றுக்கொள்ளும் எம்.பி மார்கள் மக்களுக்காக ஒற்றுமையாக செயற்பட மறுக்கிறார்களே!

•தமக்கான சம்பள உயர்வை ஒற்றுமையாக பெற்றுக்கொள்ளும் எம்.பி மார்கள்
மக்களுக்காக ஒற்றுமையாக செயற்பட மறுக்கிறார்களே!
இதோ ஒரு எம்.பி யின் சம்பள விபரம்,
சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் – ரூ. 54525.00
போக்குவரத்துக் கொடுப்பனவு – ரூ. 10000.00
உணவு, குடிபானக் கொடுப்பனவு – ரூ. 1000.00
தொலைபேசிக் கட்டணம் – ரூ. 2000.00
பாராளுமன்றக் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்கான கொடுப்பனவு -ரூ. 500.00
இதுவரை காலமும் 500 ரூபா வழங்கப்பட்டு வந்தது. இத்தொகையை 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு மாதத்துக்கு 8 நாட்கள் பாராளுமன்றம் கூடுகின்றது. இதற்கேற்ப, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபா கிடைக்கப் பெறுகின்றது.
ஏற்கனவே, வழங்கப்பட்ட கொடுப்பனவின் படி மாதத்துக்கு 4 ஆயிரம் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழமையாக கொடுக்கப்படும் மாதாந்த சம்பளம், தொலைபேசிக் கட்டணம், எரிபொருள் கட்டணம், அலுவலக ஊழியர்களுக்கான கொடுப்பனவு என்பன தவிர்த்தே இந்த வருகைக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, பாராளுமன்ற உணவகத்தில் 80 வகையான உணவுகள் தினமும் சமைக்கப்படுவதாகவும் சுமார் 500,000 ரூபாய்கள் தினமும் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 400 ரூபாய்கள் பெறுமதியான ஒருவேளை உணவுக்கு, உறுப்பினர்களிடமிருந்து வெறும் 12.50 ரூபாய்களே அறவிடப்படுகிறது.
அமர்வுகள் இடம்பெறும் தினத்தில் சுமார் 200,000ரூபா பெறுமதியான உணவு விரயமாகிறதாம். வருடாந்தம் சுமார் 10 கோடி ரூபாய்கள் உணவகத்திற்கு நஷ்டம் ஏற்படுகின்றதாம்.
கொழும்பில் இலவச விடுதி, தீர்வையற்ற வாகனம் (சுமார் ஒன்றரைக் கோடி பெறுமதியான), எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி, அலைபேசி கொடுப்பனவுகள் எல்லாம் கொடுத்து இவர்களுக்கு அமர்வுகளுக்கான கொடுப்பனவையும் அதிகரிப்பது மக்கள் மீதான சுமைகளை அதிகரிக்கும் செயலாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சலுகைகளில் சரி பாதி மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என அரசியலமைப்பில் இருப்பதனால் மாகாண சபைகளிற்கான அமையச் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எமது எம்.பி மார்கள் யாருடைய நலனுக்காக போராடுகிறார்கள் என்பது இப்பொது புரிகிறதா?

No comments:

Post a Comment