Wednesday, December 30, 2015

ஜனாதிபதி மைத்திரியின் கோபம் உண்மையானதா?

•ஜனாதிபதி மைத்திரியின் கோபம் உண்மையானதா?
உலகில் பாலியல் விபச்சாரத்தில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. இது குறித்து ஜனாதிபதிக்கு கோபம் வரவில்லை.
தமிழ் பெண்களை ராணுவம் பாலியல் வல்லுறவு செய்கிறது. அது குறித்து ஜனாதிபதிக்கு கோபம் வரவில்லை.
இலங்கை பூராவும் பாலியல் வல்லுறவு குற்றங்கள் அதிகரித்துள்ளன. அது குறித்து ஜனாதிபதிக்கு கோபம் வரவில்லை.
தாய்லாந்து, ரஸ்சியா இடங்களில் எல்லாம் இருந்து பெண்கள் கொண்டு வந்து விபச்சாரம் நடக்கிறது. இது குறித்து ஜனாதிபதிக்கு கோபம் வரவில்லை.
காரைநகரில் மாணவியை பாலியல் வல்லுறவு செய்தவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யக்கூட கடற்படை மறுக்கிறது. இது ஜனாதிபதிக்கு கோபம் தரவில்லை.
மாங்குளத்தில் ஒரு மாணவி பாலியல் வல்லறவு செய்யப்பட்டு இறந்தபோது அதை வழக்காக பதிவு செய்யக்கூட பொலிஸ் மறுத்துவிட்டது. இது ஜனாதிபதிக்கு கோபம் தரவில்லை.
ஆனால் பாடகருக்கு பெண் ஒருவர் தன் பிராவை கழற்றிக் கொடுத்தது மட்டும் ஜனாதிபதிக்கு கடும் கோபத்தைக் கொடுத்துள்ளதாம்.
ஜனாதிபதியின் கோபம் உண்மையானது அல்ல. மாறாக மக்களை திசை திருப்பும் நடிப்பு.
ஜனாதிபதி பதவி ஏற்று ஒரு வருடமாகிறது. இன்னும் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
காணாமல் போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை. மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
ஆனால் ஜனாதிபதியோ வடக்கில் ஏழை தமிழர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்து குசினியில் பொருட்களை பார்வையிடுகிறார்.
ஜனாதிபதி அவர்களே!
தமிழ் மக்கள் எம்.ஜி. ஆரின் நடிப்பையே பார்த்தவர்கள். அவர்களை இப்படி நடித்து எமாற்ற முயலாமல் எதாவது நல்லது செய்ய முயலுங்கள்.

No comments:

Post a Comment