Wednesday, December 30, 2015

இவர்கள் கலாச்சாரக் காவலர்களா? அல்லது இணையத்தள மாபியாக்களா?

•இவர்கள் கலாச்சாரக் காவலர்களா?
அல்லது இணையத்தள மாபியாக்களா?
ஒரு விபச்சாரியை கல் எறிந்து கொல்ல முனைந்தபோது "உங்களில் யார் முதுகில் அழுக்கு இல்லையோ, அவர் முதலில் கல் எறியுங்கள்" என்று கடவள் இயேசு கூறினாராம்.
ஆனால் இன்றும்கூட ஒரு பக்கத்தில் புளு+பிலிம் வெப்சைட்டுகளை நடத்திக்கொண்டு மறு புறத்தில் விபச்சாரத்திற்கு எதிரான கலாச்சாரக் காவலர்களாக சிலர் காட்டிக் கொள்வது தொடர்கிறது.
இது என்ன நியாயம் என்று கேட்டால், கேட்டவரும் அவளும் படுத்தாள் என்று எழுதுவோம் என மிரட்டுகிறார்கள்.
ஆண்களே பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளுகிறார்கள்.
ஆண்களே அவர்கள் மீது விபச்சாரி பட்டம் சூட்டுகிறார்கள்.
ஆண்களே அவர்களை விபச்சாரி என்று தண்டிக்கிறார்கள்.
என்ன கொடுமை இது?
ஒரு பெண்ணிற்கு நல்ல வேலையையோ அல்லது வாழ்க்கையையோ கொடுக்க முடியாத சமூகத்திற்கு, அப் பெண்ணை விபச்சாரி என்று கூறி தண்டிக்க என்ன தகுதி இருக்கு?
அன்று, விபச்சாரி என்று குற்றம்சாட்டி இயக்கங்களால்; பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இன்று சில இணைய மாபியாக்கள் பெண்கள் மீது விபச்சாரம் என்று பட்டம் சூட்டி மிரட்டப்படுகின்றார்கள்.
எப்போதும் பெண்களுக்குதான் தண்டனையா?
இதுவரை விபச்சார வழக்கில் எத்தனை அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்?
இதுவரை எத்தனை உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? அல்லது இதுவரை இவர்களைப் பற்றி எத்தனை இணையத்தளங்கள் எழதியிருக்கின்றன?
இந்தியாவில் ஒரு சிறுவன் விடுதலை செய்யப்படுவதற்கு எதிராக சட்டத்தையே மாற்றும்படி குரல் எழுப்புகிறார்கள். ஆனால் அதே இந்தியாவில் பீகாரில் ஒரு விதவை சமைத்த சாப்பாட்டை உண்ண முடியாது என மாணவரும் பெற்றோரும் கூறுகின்றனர். இந்த கொடுமைக்கு எதிராக எத்தனை பேர் குரல் கொடுக்கிறார்கள்?
பெண்களுக்கு சமவுரிமை கிடைக்க வேண்டும்.
பெண்ணடிமை நீங்காத வரையில்
எந்த சமூகமும் முன்னேறிவிட முடியாது.

No comments:

Post a Comment