Wednesday, December 30, 2015

650 நாட்களாக இவர்கள் மதுரை சிறையில் வாடுவது ஏன்?

• 650 நாட்களாக
இவர்கள் மதுரை சிறையில் வாடுவது ஏன்?
இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு மறுப்பது ஏன்?
கடந்த 10.03.2014 யன்று கைது செய்யப்பட்ட திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின் , கார்த்திக் ஆகிய ஆறுபேரும் கடந்த 650 நாட்களாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் மக்கள் பணத்தை ஊழல் செய்தவர்கள் அல்லர்
இவர்கள் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்ற குற்றவாளிகள் அல்லர்
இவர்கள் தங்கள மீதான வழக்கை 18 வருடம் இழுத்தடித்தவர்கள் அல்லர்
ஆனால் மக்கள் பணத்தை ஊழல் செய்து 4 வருடம் தண்டனை பெற்ற ஜெயா அம்மையாரின் தமிழக அரசு இவர்களை அடைத்து வைத்திருக்கிறது.
இவர்கள் செய்த குற்றம்தான் என்ன?
இவர்கள் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தது குற்றமா?
இவர்கள் தமிழக விடுதலைக்காக போராடியது குற்றமா?
இவர்களை விடுதலை செய்ய உரத்து குரல் கொடுப்போம்.
இவர்களுக்கு ஆதரவாய் தோள் கொடுப்போம்.
சிறையில் அடைத்து சித்திரவதை செய்தாலும்
இன உணர்வை சிதைக்க முடியாது என்பதை
தமிழக அரசுக்கு காட்டுவோம்
பெரும் படையாய் அணிதிரண்டு

No comments:

Post a Comment