Wednesday, December 30, 2015

•இதற்கு என்னதான் தீர்வு?

•இதற்கு என்னதான் தீர்வு?
புதுவருடம் பிறக்கப்போகிறது. லண்டனில் பஸ், ரயில் கட்டணங்கள் முதல் அனைத்தும் வழக்கம்போல் அதிகரிக்கப்படவுள்ளது. அனைத்து வரிகளும்கூட அதிகரிக்கப்படும்.
அடிப்படை சம்பளமும் அதிகரிக்கப்படும். ஆனால் பொருட்களின் விலை அதிகரிக்கும் வீதமும் சம்பள அதிகரிப்பு வீதமும் ஒன்றாக இருப்பதில்லை.
இதனால் வருமானத்திற்கும் செலவிற்குமான இடைவெளி அதிகரிக்கிறது. இந்த இடைவெளியை சமாளிப்பதற்கு மக்கள் தம் ஆடம்பர செலவுகளை ஒவ்வொன்றாக குறைத்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் தரமான பொருட்களை தேடி வாங்கிய மக்கள் இப்பொது மலிவான பொருட்களை தேடி வாங்குகிறார்கள்.
இதுதான் தரமான பொருட்களை விற்ற மாக்ஸ் அன் ஸ்பென்சர் கடைகள் மூடப்பட்டு மலிவான பொருட்கள் விற்கும் பவுண்ட்ஸ் சொப் கடைகள் பரவலாக திறக்கப்படுவதற்கான காரணமாகும்.
பிரித்தானிய அரசு ஒருபுறத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி மானியங்களை குறைத்து வருகிறது. இன்னொரு புறத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் இருக்கிறது.
மக்கள் பண்டிகைக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிய காலம்போய் இப்போது பண்டிகைக்கு அடுத்தநாள் விற்கும் மலிவு விலைக்காக காத்திருக்கும் காலம் வந்துவிட்டது.
மக்களின் அடிப்படைத் தேவையைக்;கூட சமாளிக்க முடியாத ஒரு காலம் விரைவில் வரவுள்ளது(Break even point) அப்படியான ஒரு காலகட்டத்தில் இந்த முதலாளித்துவத்தின் தீர்வு என்ன?
புதிய தொழில் நுட்பங்களை கண்டு பிடித்து முதலாளித்துவம் தன்னை மீளமைத்துக் கொள்ளும் என்கிறார்கள்.
புதிய தொழில் நுட்பத்தின் மூலம் முதலாளித்துவம் பெறும் வளர்ச்சியானது ஏற்படும் இடைவெளியை சிறிது குறைக்லாமேயொழிய ஒருபோதும் இடைவெளியை முற்றாக நீக்க முடியாது.
எனவே என்றாவது ஒருநாள் முதலாளித்துவம் தனது தோல்வியை சந்தித்தேயாக வேண்டும். அந்த நாள் எப்போது என்பதும் அதற்கு என்ன தீர்வு என்பதும்தான் இப்போது நம்முன் உரையாடலுக்குரிய கேள்விகளாகும்.
குறிப்பு- இங்கு நான் முதலாளித்துவத்தின் பிறப்பான பிரித்தானிய வல்லரசசின் நிலையை கூறியுள்ளேன். ஒரு வல்லரசு நாட்டிலேயே இந்த நிலை என்றால் வறிய நாடுகளின் நிலை என்னவாகும்?

No comments:

Post a Comment