Wednesday, December 30, 2015

•British Tamil Chamber of Commerce

•British Tamil Chamber of Commerce
பிரித்தானிய தமிழ் வர்த்தகர்களின் நலனை முன்னிட்டு பிரித்தானிய தமிழ் வர்த்தக நிறுவனம் இயங்கி வருகிறது. இது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம். இது பிரித்தானிய தமிழ் வர்த்தகர்களுக்கான மாபெரும் கண்காட்சி ஒன்றை எதிர்வரும் 10.04.2016 யன்று லண்டனில் நடத்தவுள்ளது.
இங்கிலாந்தில் 7000 ற்கு மேற்பட்ட தமிழ் வியாபார நிறுவனங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் இணைத்து அவற்றுக்கு தேவையான உதவிகளை வழங்கி அவை முன்னேறுவதற்கு வழி செய்வதே இவ் அமைப்பின் நோக்கமாகும்.
கடந்த வருடம் நடைபெற்ற கண்காட்சியில் 140 ற்கு மேற்பட்ட தமிழ் நிறுவனங்கள் பங்கு பற்றியிருந்தன. 4000ற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர். இம்முறை 10 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழ் நிறுவனங்கள் தங்களை அறிமுகம் செய்யவும் தமது வியாபாரத்தை விருத்தி செய்யவும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
கடந்த வருடம் நிகழ்வை ஒழுங்கு செய்த "நாச்சியார்" நிறுவனமே இம் முறையும் நிகழ்வை ஒழுங்கு செய்கிறது.
பிரித்தானியாவில் மட்டுமல்ல ஜரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் இவ்வாறான தமிழ் வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டு அவற்றுக்கிடையே ஒரு ஒழுங்கமைப்பு பேணப்படுமாயின் அது நிச்சயம் தமிழ் வர்த்தக சமூகத்திற்கு பயனாக இருக்கும்.

No comments:

Post a Comment