Wednesday, December 30, 2015

•மகாத்மா காந்தியின் கண்ணீர்!

•மகாத்மா காந்தியின் கண்ணீர்!
எந்தவொரு சூழ்நிலையிலும் மருத்தவமனைகள் மீது குண்டு வீசக்கூடாது என்பது ஒரு போர் விதி.
உலகின் மிகப் பெரிய கொடுமைகாரன் கிட்லர்கூட மருத்துவமனைகள் மீது ஒருபோதும் குண்டு வீசியது கிடையாது.
ஆனால் காந்தி தேசமான இந்தியாவின் அமைதிப்படை வீசிய முதல் குண்டே யாழ் மருத்தவமனை மீதுதான்.
யாழ் மருத்துவமனை மீது குண்டு வீசிவிட்டு அந்த மருத்துவமனை வாசலிலேயே காந்திக்கு சிலை வைக்கும் திறமை இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு.
இக் கொடுமை குறித்து அந்த மகாத்மா காந்தியால் கண்ணீர் மட்டுமே வடிக்க முடியும்.
"காந்தியின் கண்ணீர்" ( Tears of Gandhi )என்ற விவரணபடம் வந்துள்ளது. கீழ்வரும் இணைப்பில் அதனை பார்வையிடலாம்.
இதுவரை இந்த மருத்தவமனையில் கொல்லப்பட்டவர்களுக்கு எந்த நியாயமும் வழங்கப்படவில்லை. நட்ட ஈடும் வழங்கப்படவில்லை.
ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கியே தீரவேண்டும் என்று கூறுவோர் இந்த அப்பாவிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்று ஏன் கூறுவதில்லை?
சீக்கிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அம் மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி கூட அமைதிப்படையால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஏன் மன்னிப்பு கோரவில்லை?
இந்திய அரசு தமிழ்மக்களை இந்தியர்களாக மட்டுமல்ல மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.
இன்னமும்கூட இந்திய அரசுமீது நம்பிக்கை வைப்பவர்களின் அறியாமையை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment