Wednesday, December 30, 2015

•வைக்கோல் பட்டரை நாய்கள் தானும் படுக்காது. மற்றவர்களையும் படுக்க விடாது!

•வைக்கோல் பட்டரை நாய்கள் தானும் படுக்காது.
மற்றவர்களையும் படுக்க விடாது!
தமிழ் மக்கள் பேரவையினர் தமிழீழம் என்னும் தனிநாடு கோரவில்லை
தமிழ் மக்கள் பேரவையினர் ஆயுதப் போராட்டம் செய்வதாக கூறவில்லை.
தமிழ் மக்கள் பேரவையினர் இந்தியா எதிரி என்று கூறவில்லை
தமிழ் மக்கள் பேரவையினர் அமெரிக்கா தேவையில்லை என்று கூறவில்லை
தமிழ் மக்கள் பேரவையினர் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைக்கவில்லை
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்கள் பேரவையினர் தாம் ஒரு அரசியல் அமைப்பே இல்லை என்கின்றனர்.
இருந்தாலும்கூட அதை ஏற்றுக்;கொள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுமந்திரன் அடம் பிடிக்கிறார்.
தமிழ்தேசிய கூட்மைப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால் இப்படி ஒரு அமைப்பு தோன்றியிருக்க முடியாதே!
தமிழ்தேசிய கூட்டமைப்பு சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக உண்மையில் போராடியிருந்தால் இப்படி ஒரு அமைப்பு தோன்றியிருக்க முடியாதே!
தமிழ்தேசிய கூட்டமைப்பு காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்திருந்தால் இந்த அமைப்பு தோன்றியிருக்க முடியாதே!
தமிழ்தேசிய கூட்டமைப்பு மீள் குடியேற்றத்திற்கு குரல் கொடுத்திருந்தால் இப்படி ஒரு அமைப்பு தோன்றியிருக்காதே!
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர் பிரச்சனைக்கு தீர்வு குறித்து உண்மையாகவே உழைத்திருந்தால் இப்படி ஓரு அமைப்பு தோன்றியிருக்க முடியாதே!
தமிழ்தேசிய கூட்டமைப்பு தானும் போராடாது. மற்றவாகளையும் போராட ஒருபோதும் விடாது.
மொத்தத்தில் இவர்கள் வைக்கோல் பட்டரை நாய்களை விட மோசமானவர்கள்.
தமிழ் இனத்தின் மிகப் பெரும் சாபக்கேடு இவர்கள்.

No comments:

Post a Comment