Wednesday, December 30, 2015

•தமிழ் மக்களுக்கு இன்னும் ஆறு மாதத்தில் தீர்வு கிடைக்குமா?

•தமிழ் மக்களுக்கு இன்னும் ஆறு மாதத்தில் தீர்வு கிடைக்குமா?
கடந்த யூன் மாதம் தேர்தலின் போது ஒரு வருடத்திற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்படும் என சம்பந்தர் அய்யா கூறினார்.
அதன்படி ஆறு மாதம் கடந்துவிட்டது. இன்னும் ஆறுமாதம் இருக்கின்றது.
ஆறு மாதத்திற்குள் அதாவது இன்னும் 180 நாட்களில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
சம்பந்தர் அய்யா பெரிய சாணக்கியன். முதுபெரும் ராஜதந்திரி. எனவே கூறயபடி இன்னும் ஆறு மாதத்திற்குள் தீர்வு பெற்று தந்துவிடுவார் என்று அவரின் விசுவாசிகள் கூறுகின்றனர்.
சம்பந்தர் அய்யாவுக்கு எம்.பி பதவி கிடைத்தது. அத்தோடு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது. அதுமட்டுமன்றி நேற்று திரிகோணமலை மாவட்ட அபிவிருத்தி உதவி சேர்மன் பதவியும் கிடைத்துள்ளது.
தமிழ்மக்களுக்கு தீர்வு கிடைக்குதோ இல்லையோ ஆனால் சம்பந்தர் அய்யாவுக்கு பதவிகள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன.
ஒருவேளை தனக்கு பதிவி பெறுவதைத்தான் தமிழ்மக்களுக்கு தீர்வு பெறுவதாக சம்பந்தர் அய்யா நினைத்திருக்கிறாரோ தெரியவில்லை.
சம்பந்தர் அய்யாவின் விசுவாசிகளே!
தான் கூறியபடி ஒரு வருடத்திற்கள் தீர்வு பெற்று தராவிடின் சம்பந்தர் அய்யா உயிரை விடாவிட்டாலும் பரவாயில்லை பதவிகளையாவது துறப்பாரா?
ஏனென்றால் அவரை மானஸ்தன் என்றும் கவரிமான் ஜாதி என்றும் சொல்லுகிறார்கள் அல்லவா!

No comments:

Post a Comment