Wednesday, December 30, 2015

பேரறிவாளனுக்கு இனியாவது நீதி வழங்கப்படுமா?

 பேரறிவாளனுக்கு இனியாவது நீதி வழங்கப்படுமா?
ஒரு காட்டிலிருந்து அலறியடித்து ஓடி வந்த பசுவைத் தடுத்த யானை "ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்? " என்று கேட்டது. "காட்டில் உள்ள எல்லா எருமைகளையும் பிடிப்பதற்கு அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறது" என்றது பசு. "நீ பசுதானே. அப்புறம் எதற்கு ஓடுகிறாய்?" என்று யானை கேட்க "நான் பசுங்கிறது எனக்கு தெரியும். ஆனா என்னை அரசாங்கம் பிடிச்சிச்ன்னா நான் எருமை இல்லை பசு என்று நிரூபிக்க 25 வருடமாயிடும்" என்றது பசு. இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓட ஆரம்பித்தது.
கிட்டத்தட்ட பேரறிவாளன் கதையும் இந்த பசுவின் கதை போலவே இருக்கின்றது.
தாமதிக்கப்ட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். 25 வருடங்களாக காத்துகொண்டிருக்கும் பேரறிவாளனுக்கு தாமதித்தாவது நீதி வழங்கப்படுமா?

No comments:

Post a Comment