Wednesday, December 30, 2015

•சல்மான்கான் விடுதலை ஆச்சரியம் இல்லை.

•சல்மான்கான் விடுதலை ஆச்சரியம் இல்லை.
மாறாக, விடுதலை செய்யாவிடின்தான் ஆச்சரியம்!
சல்மான்கான் குடித்துவிட்டு கார் ஓட்டியது குற்றம் இல்லை.
சல்மான்கான் ஏழை மீது கார் ஏற்றிக் கொன்றது குற்றம் இல்லை.
மாறாக, அந்த ஏழை வீதி ஓரத்தில் படுத்திருந்ததே குற்றமாகும்.
ஏ.கே 47 ஆயுதம் வைத்திருந்த நடிகர் சஞ்தத் பல முறை பரோலில் வெளியே வந்தார். அதுமட்டுமல்ல விரைவில் அவரை நன்னடத்தையில் விடுதலை செய்யவும் உள்ளார்கள்.
ஆனால் பற்றரி வாங்கி கொடுத்ததாக கூறப்படும் பேரறிவாளனுக்கு பரோல் விடுதலையும் இல்லை. 25 வருடமாகியும் நன்னடத்தை விடுதலையும் இல்லை.
சங்கரராமனை ஆள் வைத்து கொலை செய்த "தாதா" சங்கராச்சாரியார் விடுதலை.
அப்படியென்றால் சங்கரராமன் தன்னைத்தானே கொலை செய்து இறந்தாரா?
உள்ளவனுக்கு ஒரு நீதி.!
இல்லாதவனுக்கு இன்னொரு நீதி!
இதுதானா இந்திய நீதி?
இந்திய நியாயப்படி,
சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமில்லை.
மாறாக அவர் தண்டிக்கப்பட்டிருந்தாலே ஆச்சரியமாக இருக்கும்.

No comments:

Post a Comment