Saturday, February 26, 2022

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்து போராட்டம் சுமந்திரன் அவர்களால் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நல்ல விடயம். பாராட்டுக்கள். ஒருபுறம் இந்தியாவுக்கு கடிதம் எழுதிவிட்டு மறுபுறம் எதற்காக மக்களை திரட்டி கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும் என நாம் கேட்கப்போவதில்லை. இந்திய அரசிடம் நம்பிக்கை இழந்துவிட்டீர்களா அல்லது எதிர்வரும் தேர்தலுக்காக மக்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளீர்களா என நாம் கேட்கப்போவதில்லை. அல்லது, அமெரிக்கா சென்று சமஸ்டி கேட்டபோது இந்த பயங்கரவாத தடைச்சட்டததை நீக்குமாறு கோரியிருக்கலாமே எனவும் நாம் கேட்கப்போவதில்லை. நாம் கேட்பதெல்லாம் இதே சட்த்தின் கீழ் சுமந்திரன் பெயரால் 20 தமிழ் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவே முதலில் அவர்களை விடுதலை செய்யும்படி கூறிவிட்டு அப்புறம் பயங்கரவாத தடைச்சட்த்திற்கு எதிராக சுமந்திரன் போராடுவதே பொருத்தமாகும். இல்லையேல் இது சுமந்திரனின் சுத்துமாத்து அரசியல் என்றே கருதப்படும்.

No comments:

Post a Comment