Saturday, February 26, 2022

காதலர்தின வாழ்த்துக்கள்!

•காதலர்தின வாழ்த்துக்கள்! வீட்டில் பெற்ற குழந்தைக்கு பால் வாங்க பணம் இல்லை. அந்த குழந்தை இறந்தபோது பிரேத பெட்டி வாங்கவும் பணம் இருக்கவில்லை. கணவன் வேலைக்கு செல்வதில்லை. எப்போதும் நூல்நிலையங்களில் படித்துக்கொண்டிருந்தார். இப்படி ஒரு வருடமோ இரண்டு வருடமோ நடக்கவில்லை. பல வருடங்களாக நடந்தது. இத்தனைக்கும் அந்த பெண் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் இருந்து வந்தவள். ஆனாலும் அந்த பெண் ஒருநாள்கூட தன் கணவனை சினந்ததில்லை. மாறாக மேலும் மேலும் அன்பால் அரவணைத்தாள். அதற்கு ஒரேயொரு காரணம் அவள் கொண்ட காதல். அதனால்தான், ஜென்னியின் அன்பும் காதலும் தனக்கு கிடைத்திருக்காவிடின் தன்னால் மார்க்சியத்தை படைத்திருக்கமுடியுமா என்பது சந்தேகமே என்கிறார் மார்க்ஸ் உலகில் சிறந்த தத்துவத்திற்காக மட்டுமன்றி உலகில் சிறந்த காதலர்களுக்காகவும் மார்க்ஸ் ஜென்னி இன்றளவும் நினைவு கூரப்படுகின்றனர். ஆனால் சிலர், மார்க்ஸ் வீட்டில் பணிபுரிந்த ஒரு வேலைக்கார பெண்ணுடன் உறவு வைத்திருந்தார் என்றும் அதனால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்றும் எழுதி மார்க்ஸ் ஜென்னியின் உயர்ந்த காதலைக் கொச்சைப்படுத்துகின்றனர். ஆனால் அவதூறுகள் மூலம் அந்த மாபெரும் ஆசானை அப்புறப்படுத்திவிட முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

No comments:

Post a Comment