Saturday, February 26, 2022

சுதந்திரதினத்தை முன்னிட்டு

சுதந்திரதினத்தை முன்னிட்டு 197 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நாளை விடுதலை செய்யப்படவுள்ளார்கள். ஆனால் இதில் தமிழ் அரசியல் கைதிகள் ஒருவர்கூட விடுதலை செய்யப்படவில்லை ரஞ்சன் ராமநாயக்காவை விடுதலை செய்யுமாறு கோரிய சஜித் பிரேமதாசா தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி கோரவில்லை. இந்த சஜித் பிரேமதாசாவுக்கு வோட்டு போடும்படி கேட்ட எமது தமிழ் தலைவர்களும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி கோரவில்லை. சிங்கள இனவாதியான ஞானசார தேரர் பிக்குகூட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி கோரியுள்ளார். ஆனால் தீர்வு 13ஐக் கேட்டு இந்தியாவுக்கு கடிதம் அனுப்பிய தமிழ் தலைவர்களால் இவ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்ப முடியவில்லை. ஜனாதிபதி கோத்தபாயா கொண்டுவரப்போவது ஒரேநாடு ஒரே சட்டம். ஆனால் நீதி மட்டும் சிங்கள இனத்திற்கு ஒரு நீதி. தமிழ் இனத்திற்கு ஒரு நீதி.

No comments:

Post a Comment