Saturday, February 26, 2022

“புளட்’ தலைவர் உமா மகேஸ்வரன்!

•“புளட்’ தலைவர் உமா மகேஸ்வரன்! இந்தியாவில் இருந்துகொண்டு இந்திய உளவுப்படைகளின் சதிகளுக்கு ஒத்துழைத்திருந்தால் இன்று தனது 77 வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார். ஆனால் இந்திய சதிகளுக்கு இணங்க மறுத்து இந்தியாவை விட்டு வெளியேறியதால் இந்திய உளவுப்படையின் கைக்கூலிகளால் 16.07.1989 யன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மீது பல விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் சிறந்த படிப்பு , நல்ல உத்தியோகம், வசதியான வாழ்வு அனைத்தையும் துறந்து தன் இனத்திற்காக அவர் போராட வந்தமை மதிக்கப்பட வேண்டியது. அவர் தன் கையால் யாரையும் கொலை செய்ததாக தெரியவில்லை. ஆனால் அவர் பெயரால் கொலை செய்தவர்கள் இன்று இந்திய உளவுப்படையின் அரவணைப்பில் இருந்துகொண்டு அவரை கொலைகாரன் என்று விமர்சிப்பது காலக் கொடுமை

No comments:

Post a Comment